உள்ளம் அமைதி அடைய….

in 2014 ஏப்ரல்

Y. அஜ்மல்கான், ஜெகதாப்பட்டினம், செல்: 8608735960

நாம் வாழும் சூழலில் மன அழுத்தம் (Depression) பெறாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு உள்ளம் அமைதியை இழந்து விட்டது. இதனால் நரம்பியல் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தாம்பத்ய நோய்கள் ஏற்படுகிறது. மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க ஒரு முஃமின் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ளவர்கள் இயற்கைக்கு முரணான குடும்ப உறவுகளால், குடும்ப உறவுகள் சீர்கெட்டு மன நோய்க்கு ஆளானோர் அதிகமாக உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகின்றது. கேரளாவில் இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம்; மன வேதனையில் சிக்கி தற்கொலைகளைச் செய்வதில் நாட்டிலேயே முதலாவது மாநிலமாகத் திகழ்கின்றது.

படித்தவர்களையும், பாமரர்களையும், விட்டு வைக்காத மன நோய் ஏற்பட யார் காரணம்? முஸ்லிம்களும் ஒரு சிலர் தற்கொலை செய்வதை படிக்கின்றோம். முஸ்லிம்களின் நம்பிக்கைகளில் உறுதி இல்லாத நிலையால் மன அழுத்தம் ஏற்படுகின்றது.

மன அழுத்தம் ஏற்படக் காரணங்களும், தீர்வுகளும்:
1. எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்:
ஒரு பள்ளியில் படித்த இரு மாணவர்கள் ஒருவர் டாக்டர் ஆவதும், மற்றொருவர் மளிகைக் கடையில் வேலை செய்வதும் இயல்பான செயல்களே! டாக்டரைப் பார்த்து, வேலை செய்பவர் பொறாமைப் படுவதால் இவருடைய உள்ளம், இறைவன் ஏன் நமக்கு அந்தப் பதவியைத் தரவில்லை? என்று படைத்த இறைவனையே குறை காண்கின்றான். இல்லை இவன் தன்னையே வஞ்சிக்கின்றான். மன நிம்மதி இழந்து கவலைகள் பீடிக்கின்றது. இதில் பள்ளியில் அனைவருடைய எதிர்பார்ப்பும் டாக்டர் ஆகிவிடுவதே; சிலர் கூலி வேலைக்குச் செல்லும் போது எதிர்பார்ப்பு ஏமாற்றமாக அவர்களுக்குத் தோன்றுகிறது.

தீர்வு : குர்ஆனின் வசனம்: நாடியவருக்கு விசால மாகவும் நாடியவருக்கு சுருக்கியும் உணவை வழங்கு கின்றான். அல்லாஹ் அனைத்தையும் கண்காணித் தவனாக இருக்கின்றான் என்ற வசனம் தான் மனதை ஆற்றுப்படுத்தும்.

2. எதிர்பாராத நிகழ்வுகள்:
குறிப்பாக விபத்துக்கள், தாய், தந்தை மரணம், மனைவி மரணம், கொடுமையான புற்றுநோய் போன்ற செய்திகள் கேள்விப்பட்டு மனம் கலங்கு கிறது. திடீர் என்று கேள்விப்படுவதால் ம்eஸ்ரீreவிவிஷ்லிஐ-க்கு ஆளாதல்.

தீர்வு: அல்லாஹ்வின் களாகதிரை-விதியை நம்புவது அவன் ஏற்படுத்திய ஆயுள் தவணையைப் பரிபூரணமாக நம்பிவிட்டால் மனம் அழுத்தத்தை விட்டுத் தப்பிவிடலாம். நபி(ஸல்) கூறினார்கள். “”பலமிக்க இறை நம்பிக்கையாளன் பலம் குன்றிய இறை நம்பிக்கையாளனை விடச் சிறந்தவன். அல்லாஹ்வுக்கு மிகவும் நேசமானவனும் ஆவான். ஆனால் இருவரிலும் நன்மை இருக்கின்றது. உங்களுக்குப் பயனுள்ள பணியில் ஆர்வம் கொள் ளுங்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டால் “”நான் இவ்வாறு செய்திருந்தால் இப்படி ஆகி இருக்காது” என்று கூறாதீர்கள். மாறாக (கத்தரல்லாஹ் வமா ஷாஅ ஃபஅல) அல்லாஹ் ஏற்படுத்திய விதி, அல்லாஹ் நாடியதைச் செய்து விட்டான் எனக் கூறுங்கள். ஏனெனில் (லவ்) “ஆல்’ எனும் நிபந்தனைச் சொல் ஷைத்தானின் செயலை ஆரம்பமாக்கி விடுகிறது”. நூல்:முஸ்லிம்.
நடந்து விட்டவற்றை அல்லாஹ்வின் தீர்வாக விதியை ஏற்றுச் செயல்படுவதே மன அமைதியைத் தரும்.

சமூகக் காரணிகள்  (Social Factors)
நாம் வாழும் சமூகம் பொருளாதார ஏற்றத் தாழ்வு கள் நிறைந்த சமூகம். அண்டை வீட்டினரால் உறவினர்களால், தொழில் போட்டிகளால் பல்வேறு வகையில் மன அழுத்தம் ஏற்படுகின்றது. அடுத்த வீட்டில் நம் காது கிழிய ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஒலியை பெருகச் செய்வது (அல்லது) நம்மைக் கோபமூட்ட நமக்குப் பிடிக்காதவற்றைச் செய்வதால் மன நிம்மதி கெட்டு எரிச்சல் அடைந்து விடுகின்றோம் (உ.ம்) சுன்னத் ஜமாஅத் பள்ளிகளில் காலை ஃபஜ்ரு தொழுது விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்க முடியவில்லை. திக்ரு செய்ய முடிய வில்லை. தொழுகையாளிகள் பலருடைய தொழு கைக்கு வேட்டு வைக்கும் கூட்டு துஆ, உரத்த சப்தத்தில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்றும் கோரசாக 10 தடவையும், பிறகு ஸலவாத்தைக் காட்டு கத்தாக கத்தியும் பிறகு யாசீன் ஓதி, மீண்டும் கூட்டு துஆ, மீண்டும் சலவாத்து கத்தல் பிறகு கஃப்பாரா துஆ என்று பள்ளியைச் சந்தைக் கடை நிலைக்குக் கொண்டுப் போகின்றது. இதெல்லாம் முடிந்தவுடன் தப்லீக் ஜமாஅத்தினரின் சிறிய அமர்வும், அமல் களின் சிறப்பும், வருç கப் பதிவேடும், டீ உபச்சாரமும் அங்கு ஏற்படும். இதில் எங்கு அல்லாஹ்வை 7:55, 205கூறும் உள்ள அமைதியுடன் துஆ திக்ரு செய்வது ?சூரியன் உதயம் முன்பு இந்த தகாத காரியங்களால் மன நிம்மதி இழக்க வேண்டியது தான்.

தீர்வு : அல்லாஹ் குர்ஆனில் கூறும் வசனம் 13:28-ல் நம்பிக்கைக் கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க. அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல் லாஹ்வை நினைவு கூற பள்ளிச் சென்றால் மன நிம் மதி கிடைப்பதற்குப் பதில் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படுகிறது பாவிகளின் செயலால். இப்படிப்பட்ட சமூ கக் காரணங்கள் மலிந்தே கிடக்கின்றன. பொறுமை யையும், சகிப்புத் தன்மையையும் தவிர வேறு எதுவும் பயனளிக்கப் போவதில்லை.

இந்த வசனம் 21:35 அனைத்து மனப் பிரச்சனை களுக்கும் அருமருந்து “”ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகவே இருக்கிறது. தீமையைக் (துன்பங்களை) கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் சோதிக்கின்றோம். நீங் கள் நம்மிடமே திரும்புவீர்கள். எந்த மனிதரும் மேற்கண்ட வசனத்திற்கு விதிவிலக்கில்லை.

துன்பங்கள் நிகழ்ந்து விட்ட உடனே மனம் கலங்கிய உடன் அடுத்த விநாடி ஒரு மூமின் இந்த வார்த்தைச் சொன்னால் அவனது ஆழ்மனம் Subconsious mind மன அழுத்தத்திலிருந்து சிறிது சிறிதாக விடுதலை ஆகிவிடுகின்றது. நபி(ஸல்) கூறினார்கள்.

“”திண்ணமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். திண்ணமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் ஆவோம். யா அல்லாஹ்! எனது துன்பத்தில் எனக்குக் கூலி வழங்குவாயாக! மேலும் இதற்குப் பகரமாக இதனினும் சிறந்த இலகுவை வழங்குவாயாக!” நூல் :முஸ்லிம்.

ஆர்வமின்மையும், அலைமோதும் மனமும்!!
ஒருவர் தனக்குப் பிடிக்காத வேலைக்குத் தள்ளப்படுகிறார் என்றால் அவரால் அந்த வேலையைச் செய்து விட முடியாது. ஒருவர் எந்தக் காரியம் செய்வதற்கும் ஆர்வம், பிறகு துறை சார்ந்த அறிவு பிறகு விடா முயற்சி பிறகு மற்றவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் அனுபவம் கிடைத்துவிடும். இந்த வழி முறையால்தான் வாழ்வின் வெற்றிக்கு வழி கிடைத்து விடும். எல்லாத் தொழில்களுக்கும் இதே நடைமுறை தான். தனக்கு ஆர்வம் என்ற முதல் நிலையே இல் லாத ஒருவரால் எதையும் அடைய இயலாது. பிறகு தோல்வியும் விரக்தியும் தான் மிச்சம். ஒருவர் செக்யூரிட்டி வேலை செய்ய ஆசைப்படுகிறார் என்றால், அதே வேலையை செய்தால் உள்ளம் அமைதி அடையும். செக்யூரிட்டி வேலை அவ்வளவு இலகுவானதல்ல. பார்ப்போருக்கு இலகுவாகத் தோன்றலாம். 12 மணி நேரம் நின்ற இடத்திலேயே கண்காணித்துக் கொண்டு பேசுவதற்கோ யாரு மில்லாமல் உட்கார்ந்தால் உறக்கம் தான் வரும். எப் போது பு.றீ.நு. உயரதிகாரி வருவார், தான் வேலைப் பார்க்கும் இடத்தில் பொருட்களைப் பாதுகாப்பதும், யார், யார் வருகிறார்கள் என்று கவனிப்பதும் அசந்தால் உயிரையே இழக்கும் பதவி தான் செக்யூரிட்டி பதவி. இப்படி எந்த வேலையாக இருந் தாலும், தொழிலாக இருந்தாலும் கஷ்டம், கஷ்டம், காரணம் நம் மனம் விரும்பாத வேலையை நாம் செய்வதால் ஏற்படுகின்றது.

தீர்வு : விரும்பாத வேலையில் கிடைக்கும் வருவாய் அதிகம் என்பதால் விரும்பியத் தொழிலை இழந்து கஷ்டப்படுகிறோம்; அல்லது சமூகச் சூழலால் விரும் பாதத் தொழிலை ஏற்கின்றான். விரும்பியதையே படிக்க வேண்டும்; விரும்பியத் தொழிலைச் செய்ய வேண்டும்.

குடும்ப உறவுகளும், பொறுப்புகளும் :
இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலோர் அயல்நாட்டு வாழ்வால் இரு உலக வாழ்வின் நஷ்ட வாளிகளாக மாறி விட்டார்கள். பணம் வாழ்வதற்கு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வாழ்வதற்குத்தான் பணம் அவசியம்; பணத்தைப் பெற்று வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம். வெளிநாட்டு வாழ்க்கைக்கான நிர்பந்தம் என்ன? கடன் பளுவால் நெருக்கடி; இதனால் மானம் மரியாதை போய்விடும், என்னால் உயிரோடு இருக்க முடியாது என்ற நிலை வரும் போது கணவன் மனைவியிடம் “”நம் கடனை அடைத்து விட்டு வந்து விடுகின்றேன்” என்று கூறி மனைவியிடம் அனுமதிப் பெற்று செல்வதில் தப்பில்லை. இன்றைய மனைவி மார்கள் கணவன்மார்களிடம் “”நீங்கள் கட்டாயம் வெளிநாடே போய் ஆகனும்; இல்லாவிட்டால் குடும்பத்தில் பெரிய சண்டைச் சச்சரவுகள் வந்து விடும்” என நச்சரிக்கின்றாள். கணவன் தரும் சாதாரணத் தொகையைக் கொண்டு உள்ளூரில் வாழ்வதால் அவளுடைய கெளரவம்(?) பாதிக்கப்படு கிறதாம். அவளுடைய அக்காள் கணவர் கார் வாங்கி விட்டார், அவளுடைய 2வது அக்கா கணவர் அக்கா விற்கு நெக்லஸ் வாங்கி கொடுத்தார், மூன்றாவதாகிய நான் என்ன சுகம் பெற்றேன். ஒன்றுமில்லையே! 4வது என் தங்கை கணவர் துபையிலிருந்து கார்கோவில் மாதம் ஒருமுறை சமான்களை அனுப்புகிறார்.

இப்படிப்பட்டப் பலகீனமான நம்பிக்கையுள்ளப் பெண்களால் வேறு வழியின்றி கணவனின் பொறுப்பில் மனைவி அமர்ந்து ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் குடும்பமே சிக்குகின்றது. நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்; செல்வம் என்று வரும்போது மார்க்கம் துடைத்தெறியப்படுகின் றது. “”பெண்கள், ஆண்களை நிர்வாகம் செய்யக் கூடியவர்கள்”. இதனால் மன நிம்மதி இழந்து, சுய இன்பம் என்ற தவறான வழிமுறை, தூக்கமின்மை. தாயின் வளர்ப்பிலேயே வளர்ந்த மக்கள் அவருக்கு கட்டுப்படுவதுமில்லை.

அல்லாஹ் நமக்குத் தந்ததைப் பொருந்தி இருந்தால் எளிய வாழ்க்கை, ஈருலக பாக்கியம், உடல் ஆரோக்கியம் அனைத்தும் கிடைத்திருக்கும். எல்லாம் நஷ்டப்படுவதை யார் விரும்புவார்கள்? ஷைத் தான்களும் அவனது நண்பர்களுமே.

தீர்வு : பொறுப்புகளை குடும்பத் தலைவரிடம் ஒப்படைத்து அவரின் கட்டளைகளைப் (4:34)படி கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது குடும்ப உறவு சீர்பெறும். இன்னும் எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரிடமிருந்தும் எங்கள் சந்ததிகளிலி ருந்தும் எங்களுக்கு கண்களின் (குளிர்ச்சியைத்) தந்து அருள்வாயாக! அன்றியும் பயபக்தியுடையவர் களுக்கு எங்களை வழிகாட்டியாகவும் ஆக்கு வாயாக!” என்றும் கூறுங்கள். மனைவிகள் மூலம் அமைதியைப்(லிதஸ்குனூஹா) பெறுவதற்காக அல்லாஹ் சொல்லும்போது, தாம்பத்யம் இல்லாத வாழ்வால் அவளும், அவனும் உடல் ரீதியாக நோய் களுக்கு ஆளாகின்றனர். மனநோய், இதய நோய், ஹார்மோன்களில் செயல்பாடுகள் மாறுதல் தூக்க மின்மை, இவை ஏற்படுகின்றன.

ஏற்படும் மாற்றங்கள்:
1. எதையோ இழந்தது போன்ற உணர்வு
2. தோல்வி பயம்
3. தன்னை தாழ்வாகக் கருதுவது
4. உணர்ச்சி வசப்படுதல்
5. பிறரின் கருத்துக்களைத் தள்ளி வைப்பது
7. தூக்கமின்மை
8. கழிவறையில் நீண்ட நேரம் எதையோ சிந்திப்பது
8. தனிமையை நாடுதல்
9. பசியின்மை (அ) அகோரப் பசி
10. ஆடைகளைச் சுத்தமாக இல்லாத நிலையில் அணிவது.

மேற்கண்ட குறிகள் றீமிreவிவி உடலில் ஏற்பட்டதற் கான அடையாளம். நவீன மருத்துவத் துறையில் Stress  உண்டு, மருந்துகள் உண்டு, யுனானி மருத்துவத்தில் பரிபூரண தீர்வு இதற்கு உண்டு. நிரந்தர குணமளிக்கும் மருந்துகள் பாதிக்கப்பட்ட நரம்புகளைப் பலப்படுத்தும்.

நீங்கள் செய்ய வேண்டியவை:
1. அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பது; உங்கள் நம்பிக்கையின் உறுதிக் கேற்ப சோதனைகள் அமையும், அவனையே சார்ந்து வாழ்வது.
2. மறுமையில் சரியான தீர்ப்பை அல்லாஹ் வழங்குவான்; எந்த ஆத்மாவும் மற்றொரு ஆத்மா விற்கு உதவி செய்திட முடியாத நாள்-அந்த நாளின் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே; அவன் ஒருபோதும் அநீதி செய்ய மாட்டான் என்று நம்புவது. நம்முடைய இழப்புகள் எதுவாக இருந்தாலும் அந்த நாளில் கிடைத்து விடும் என நம்புவது.
3. கடுமையான நோய், தூக்கமின்மை உள்ளவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வது 13:28ன்படி அமைதி கூரும்போது இரத்த அழுத்தம், பக்க வாதம், இதய நோய்கள் நமக்கு ஏற்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
4. நீங்களே உங்கள் வேலைகளைச் செய்துப் பழகுங்கள்; துணி துவைப்பது முதல் அயன் செய்யும் வரை உதவிக்கு யாரையும் அழைக்க வேண்டாம்.
5. நல்ல நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசும்போது மனசில் உள்ள காயங்கள் ஆறிவிடும். மனச் சுமை இறங்கிவிடும்.
6. காலையிலும், மாலையிலும் சூரிய உதயத்திற்கு முன்னும் மறைவதற்கு முன்னும் அல்லாஹ்வை திக்ரு செய்திடுங்கள். நபி(ஸல்) கூறினார்கள். “எவர் காலையில் 100 தடவையும் மாலையில் 100 தடவையும் ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (அல்லாஹ்வைப் புகழ்வதுடன் அவன் தூயவன் என்றும் துதிக்கிறேன்) என்று ஓதுவாரோ அவரது “அமலை’ விடவும் சிறந்த அமலை மறுமை நாளில் யாரும் கொண்டு வரமுடியாது. அவர் சொல்லியது போன்று சொன்னவரையோ அதனினும் அதிக மாகச் சொன்னவரையோ தவிர!”  நூல்: முஸ்லிம். (ர.அ.) 5222

Previous post:

Next post: