முசல்லா தொழும் இடமா? தொழுகை விரிப்பா?

in 2017 மார்ச்

இப்னு ஹத்தாது

(இதையும் எண்ணிப் பாருங்கள்; கஃபா என்னும்) அந்த ஆலயத்தை நாம் மக்கள் ஒன்று கூடும் இட மாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கி னோம். இப்ராஹீம் நின்ற இடத்தை தொழும் இட மாக ஆக்கிக் கொள்ளுங்கள் (என்றும் நாம் சொன் னோம்) இன்னும், என் ஆலயத்தைச் சுற்றி வருபவர் கள், தங்கி இருப்பவர்கள் ருகூஉ செய்பவர்கள். ஸஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காக நீங்களிருவரும் தூய் மையாக வைத்திருக்கவேண்டும் என்று இப்ராஹீமி டமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். (அல்பகரா : 2:125)

இந்த குர்ஆன் வசனத்தை மீண்டும் மீண்டும் படித்து அதன் சாரத்தையும், சத்தையும் உள்ளத்தில் பதிய வையுங்கள். முசல்லா என்பது தொழும் இடமே அல்லாமல் தொழுகை விரிப்பு அல்லவே அல்ல என உறுதியாகக் கூறுகிறது. இந்த வசனம் யாருக்கு வஹி யாக இறங்கியது? அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இறங்கியது. நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராகச் செயல்பட்ட அந்த 23 வருட வாழ்க்கையில் தொழுகை விரிப்பு விரித்துத் தொழுததாக ஒரேயயாரு ஆதாரமா வது இருக்கிறதா? இல்லவே இல்லை. அதற்கு மாறாக மஸ்ஜிதுன் நபவி இறைத்தூதரின் பள்ளிவாசல் மண் தரையாகவே இருந்தது. ஒரு ரமழான் இரவில் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதார்கள். அன்று மழை பெய்தது. அவர்களின் நெற்றியில் ஈரம் காரணமாக மண் ஒட்டி இருந்ததை நாங்கள் பார்த் தோம் என்று நபிதோழர்கள் கூறியது செய்தியில் பதிவாகியுள்ளது.

இது மட்டுமா? முன்னைய சமுதாயங்களுக்குக் கொடுக்கப்படாத ஒரு தனிச் சலுகை இறுதிச் சமுதா யமான நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மண்ணில் தயம்மும் செய்வதும், உலகின் எப்பகுதி யிலும் மண்ணில் தொழுவதுமாகும். மார்க்கம் இவ் வளவு தெளிவாக இருந்தும் மதகுருமார்கள் என வேட மிடும் இந்த மவ்லவிகளுக்கு ஏனிந்தத் தடுமாற்றம்?

தொழுகைக்குத் தனி விரிப்புத் தேவை என்றால், அதுதான் மார்க்கம் என்றால் அதை யார் காட்டித் தந்திருக்க வேண்டும்? இறுதித் தூதரல்லவா? காட்டித் தந்தார்களா? இல்லையே!

தொழுகை விரிப்பு, அவசியம் என்றால் என்ன செய்திருப்பார்கள்? ஈச்சம் கீற்றைக் கொண்டு பள்ளிக் குக் கூறை போட்டது போல், அந்தக் கீற்றைப் பாயாக வும் பள்ளியில் தொழுகை விரிப்பாகவும் செய்திருப் பார்களா? இல்லையா? செய்து காட்டினார்களா? இல்லையே! குறைந்தபட்சம் தொழ வைக்கும் தனக்கு மட்டிலுமாவது ஒரு சிறு பாயைப் பின்னி அதை விரித்து அதில் நின்று தொழ வைத்து நமக்கு வழி காட்டினார்களா? இல்லையே!

அப்படியானால் 2:125 குர்ஆன் வசனத்தில் கூறப் பட்டுள்ள முசல்லா-தொழும் இடம் என்று கூறப்படு வதை தொழுகை விரிப்பாகவும், இமாமுக்கு மஃமூம் களை விடத் தனித்து உயர்வாகக் காட்டும் ஒரு தனி விரிப்பாகவும் (மவ்லவிகல் பாஷையில் முசல்லா) கற் பனை செய்தது மதகுருமார்கள் என்ற போர்வையில் இருக்கும் இம்மவ்லவிகள்தானே? இதை யாரிட மிருந்து இம்மவ்லவிகள் காப்பி அடித்தார்கள் தெரி யுமா? நபி(ஸல்) அவர்கள் அதையும் அடையாளம் காட்டியே சென்றிருக்கிறார்கள். அது வருமாறு.

ஒரு காலம் வரும் நீங்கள் முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்; அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால், நீங்களும் அந்தப் பொந்தில் நுழைவீர்கள். (பார்க்க : புகாரீ : 3456, 7319, 7320, முஸ்லிம் : 5184)

நபி(ஸல்) அவர்கள் இம் முஸ்லிம் மதகுருமார் களான ஆலிம், அல்லாமா, மவ்லவி என வீண் பெருமை பேசுபவர்களை (பார்க்க : 7:146) எவ்வளவு கனகச்சித மாக, துல்லியமாக அடையாளம் காட்டிச் சென்றிருக்கி றார்கள் பாருங்கள். மார்க்கத்தை மிகக் கொடிய ஹரா மான வழியில் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள, அதன் காரணமாகவே வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் இல்லுமினாட்டிகளான யூதர் களை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்று வதை நீங்கள் பார்க்கத்தானே செய்கிறீர்கள்.

நபி(ஸல்) அவர்கள் டிசைனான ஆடையில் தொழு கையில் அது தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அதைத் திருப்பிக் கொடுத்ததாக ஹதீஃத் உள்ள நிலையில் (பார்க்க புகாரீ : 373) இம்மவ்லவிகள் டிசைன் நிறைந்த தொழுகை விரிப்பை விரும்புகிறார் கள் என்றால் இவர்கள் யூதர்களைத்தானே பின்பற்று கிறார்கள்.  2:125 வசனம் கூறும் முசல்லாவை தொழும் இடம் என்றிருப்பதை 2:159 குர்ஆன் வசனம் கூறுவது போல் தொழுகை விரிப்பாகத் திரித்துக் கூறி இமாம்களுக் கென்று ஒரு விசே­ தனி விரிப்பாக்கி, அதையும் தொழும்போது மனதை அலைபாயச் செய்யும் பல வண்ணம் (ம்சிறீணூறூஹி) நிறைந்ததாக்கித் தொழுகையைப் பாழாக்குவது, யூத, கிறித்தவர்களின் நடைமுறையிலி ருக்கும் ஜெபமாலையை தஸ்பீஹ் மணி என்ற பெய ரால் பயன்படுத்துவது, அவர்களையே பின்பற்றி 7:55, 205 குர்ஆன் வசனங்களை நிராகரித்து (குஃப்ரிலாகி) கூட்டுப் பிரார்த்தனையை (கூட்டு துஆ) நடைமுறைப் படுத்துவது, நாங்கள் தான் மார்க்கம் கற்ற மதகுருமார் கள்; எங்களுக்குத்தான் மார்க்கம் விளங்கும் என வீண் பெருமை பேசுவது (7:146) நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரித்துக் கொடிய ஹராமான வழி யில் தங்கள் மீது விதிக்கப்பட்டக் கடமையான மார்க் கப் பணிக்கு கூலி-சம்பளத்தை ஹதியா என்ற பொய் பெயரில் வாங்கித் தின்பது, மார்க்கத்தில் இல்லாத பித் அத்தான நரகிற்கு இட்டுச் செல்லும் வீண் சடங்கு களை மார்க்கத்தின் பெயராலே அரங்கேற்றி வயிறு வளர்ப்பது இப்படிப்பட்ட அனைத்து வழி கேடுகளை யும் இந்து, யூத, கிறித்தவ மதகுருமார்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் இந்த மவ்லவிகளும் பின் பற்றி, அதற்கென்றே வீண் பெருமை பேசி 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற இறைவாக்குகள் கூறுவது போல், தங்களை நரகவாதிகள் ஆக்குவது மட்டுமில்லா மல், தங்களை நம்பித் தங்கள் பின்னால் வரும் (முகல் லித்) பெருங்கொண்ட மக்களையும் தங்களோடு நர கிற்கு இட்டுச் செல்வதோடு, அங்கு போய் நெருப்பில் வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டி, சபித்து ஒப்பாரி வைக்கப் போகிறார்கள்.

இந்த வசனங்களில் 34:31,32, 40:47,48 வசனங்கள் மவ்லவி, ஆலிம், அல்லாமா, மார்க்கம் கற்ற மேதைகள் என வீண் பெருமை பேசும் இந்த மவ்லவிகள் என்ற மதகுருமார்களையும், இதர மதங்களின் மதகுருமார் களையுமே குறிப்பிடுகின்றன. அவற்றிலும் குறிப்பாக 33:36, 66-68 குர்ஆன் வசனங்கள் மவ்லவி, மவ்லானா, ஆலிம், அல்லாமா, ஷைகு, பீர் என வீண் பெருமை பேசும் முஸ்லிம் மதகுருமார்களையே குறிப்பிட்டுக் கூறுகின்றன. ஆனால் அதற்கு மாறாக இந்த 33:36,66-68, வசனங்கள் எங்களைக் குறிப்பிடவில்லை. காஃபிர் களையே குறிக்கின்றன எனத் தார்ப்பாயில் வடித் தெடுத்த, பொய்யைக் கூறி, தங்கள் முகல்லிது பக்தர் களை ஏமாற்றி நரகில் தள்ளுகிறார்கள் இம்மவ்லவிகள்!

இந்த முசல்லா வி­யத்தைப் பாருங்கள்! தொழும் இடத்தை தொழுகை விரிப்பாக ஆக்கி, அதுவும் இமாம்களுக்கு என்று தனி விசே­ விரிப்பாக ஆக்கிப் பெருமை தேடுகிறார்கள். அதுவும் யூத இல்லுமினாட் டிகள் வலையில் சிக்கி ஆன்மீக அடிப்படையில் தொழு கையைப் பாழாக்குவதுடன், உடல் ஆரோக்கியத்தை யும் கெடுத்து வருகிறார்கள். யூத, கிறித்தவர்கள் திட்ட மிட்டுத் தயாரித்து, முஸ்லிம்களின் மனதை மயக்கி தொழுகை விரிப்பாகக் கொடுக்கும் அந்த விரிப்புகள் விரித்த சில நாட்களிலேயே அதன் மேல் பரப்பில் தூசு படிய ஆரம்பிக்கும். அந்த வகையில் தான் தொழுகை விரிப்புத் திட்டமிட்டு அவர்களால் தயாரிக்கப் படுகிறது. இவை போதாதென்று புகை, பொடி இன்னும் சில தீய பழக்கமுடையவர்கள் சஜ்தா செய்யும்போது அவர்களின் மூக்கிலிருந்து வெளிப்பட்டுப் படியும் நோய்க் கிருமிகளும் ஆரோக்கியமானவர்களின் மூக்கு வழியாக உடலினுள் சென்று அவர்களையும் நோயாளிகள் ஆக்கும்.

அந்தத் தொழுகை விரிப்பைத் தினசரி சுத்தம் செய்யவும் முடியாது. வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை எனச் சுத்தம் செய்தாலும் அதில் படிந்திருக் கும் தூசு, உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கிருமி கள் அதில் படிந்தே இருக்கும். தொழுகையாளி சஜ்தா செய்யும் போது அத்தூசும், கிருமிகளும் மூக்கு வழியே உடலுனுள்ளே சென்று பல கேடுகளை உண்டாக்கத் தான் செய்யும்.

முஸ்லிம்களை மயக்கித் தொழுகை விரிப்புகளை கோடிக்கணக்கில் விற்பதின் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் ஆதாயம். அவ்விரிப்புகள் மூலம் முஸ்லிம் களுக்கு ஏற்படும் நோய்களைப் போக்க பக்கவிளைவு களை ஏற்படுத்தும் மருந்து, மாத்திரைகள் மூலம் கோடிக்கணக்கில் பெருத்த ஆதாயம். யாருக்கு? யூத இல்லுமினாட்டிகளுக்கு! முஸ்லிம்கள் எந்தளவு ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள், மூடர்களாக இருக்கிறார்கள் என்பது புரிகிறதா?

முஸ்லிம்களின், மதகுருமார்களின் அறிவீனத் தைப் பயன்படுத்தி இந்த இல்லுமினாட்டி யூதர்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன தெரியுமா? தொழும் இடத்தை (முசல்லா) தொழுகை விரிப்பாக்கிய இந்த மூட முல்லாக்களின் அறிவீனத்தைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் டிசைன், டிசைன் தொழுகை விரிப்புகளை உற்பத்தி செய்து பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டும் யூதர்கள் அதற்கும் ஒரு படி மேலே போய் இமாம் களுக்கு மட்டுமல்ல பின்பற்றித் தொழும் தொழுகையாளிகளுக்கும் தொழுகை விரிப் பாக பெரும் விரிப்புகளை கார்ப்பெட்டில் டிசைன் டிசைன் என உற்பத்தி செய்து பள்ளி நிர்வாகிகள் தலையில் கட்டித் தங்கள் வருமானத்தை மேலும் பல மடங்குப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளி நிர்வாகிகளும் அவற்றை பெருந்தொகை கொடுத்து வாங்கி பள்ளிகளில் விரித்துப் பெருமை கொள்கிறார் கள். வீண் பெருமை! (பார்க்க : 7:146)

இப்படி வீண் பெருமை கொள்கிறார்களே அல்லா மல் அவற்றால் ஏற்படும் பெருந்தீங்கை உணர்வதாக இல்லை. மனிதனின் ஆரோக்கியத்திற்குப் பெருங் கேட்டை விளைவிக்கும் தூசு படலங்களையும், நோய் நுண் கிருமிகளையும் சுஜூது செய்யும் போது நேரடி யாக மூக்கு வழியாக உடலுனுள்ளே செல்ல எளிதாக வழி அமைத்துக் கொடுக்கிறார்கள் இம்மவ்லவிகளும், பள்ளி நிர்வாகிகளும். அதனால் தொழுகையாளிகள் பெரும் பெரும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அத னால் தொழப் போய் தானே இந்த நோய்களுக்கு ஆளாகிறோம் என சில மூட முஸ்லிம்கள் தொழு கையை விட அதாவது பள்ளிப் பக்கமே வராத சூழ் நிலை ஏற்படுகிறது. ஆம்! முதலில் இந்த மதகுருமார் களான மவ்லவிகளுக்கு ஆதாயம். அவர்கள் தொழுகை யற்ற முஸ்லிம்களைத்தான் விரும்புகிறார்கள். அதனால் தான் தொழுகையில் அல்லாஹ்வோ அவனது தூதரோ விதிக்காத விதிகளை எல்லாம் விதித்து அல்லாஹ் மிக மிக எளிதாக்கி இருக்கிற மார்க்கத்தை (பார்க்க 22:78) கடினமாக்கிப் பெருங் கொண்ட முஸ்லிம்களை (99.9%) தொழுகையற்றவர் களாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான கத்தம், ஃபாத்திஹா, கபுரு சடங்குகள், மீலாது, மவ்லூது, ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் என அனைத்து பித்அத்துகளையும் முஸ்லிம் ஆண்களையும், பெண் களையும் செய்ய வைத்து இவர்கள் தங்கள் வயிற்றையும், பையையும் நிரப்புவதோடு, பெருங்கொண்ட முஸ்லிம்களைத் தங் களின் பக்தர்களாக, முகல்லிதுகளாக தங்கள் பின்னால் கண்மூடி வர வழி திறக்கும். முஸ்லிம்களை எந்தளவு அறியாமையிலும், மடைமையிலும் மூழ்கடிக்கிறார் களோ அந்தளவு இம்மவ்லவிகளுக்கு ஆதாயம். வயி றும், பைகளும் நிரம்பும். எனவே முஸ்லிம்கள் ஆரோக் கியமாகவும், சுய சிந்தனையாளர்களாகவும் முன்னேற இம்மவ்லவிகள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள், அனுமதிக்க மாட்டார்கள்.

இம்மவ்லவிகள் பெருங்கொண்ட முஸ்லிம்களை தொழுகையிலேயே சுஜூதில் அசுத்தக் காற்று மூலம் நோயாளிகளாகவும், அதனால் தொழுகை யற்றவர் களாகவும் ஆக்குவதன் மூலம் பெருத்த லாபத்தை அடைகிறார்கள். அதேபோல் யூத இல்லு மினாட்டிகள் தனித் தொழுகை விரிப்புகள், கார்ப்பெட் தொழுகை விரிப்புகள் என டிசைன், டிசைன் என விதவிதமாகத் தயாரித்து முஸ்லிம்களிடையே விற்பனை செய்து பல்லாயிரம், லட்சம் கோடி என கோடி கோடியாகப் பணத்தைப் பறிப்பதன் மூலம் பெரும் வருமானம். முஸ்லிம்கள் சுஜூது செய்யும் விரிப்புகளாக்கி, அதனால் பல நோய்களுக்கு அவர்களை உட்படுத்தி அதனால் மருந்து மாத்திரை என மேலும் கோடி கோடியாக முஸ்லிம்களின் பணத்தை அபகரிக்கும் நச்சுத் திட்டத்தை மிக மும்முரமாக அரங்கேற்றி வருகிறார் கள். ஏமாளிகள் முஸ்லிம்களே!

முஸ்லிம்(ர.அ.) ஹதீஃத் 502,503 இரண்டிலும் பாய் (MAT) என்றிருப்பதைத் தொழுகை விரிப்பு (மவலவிகள் பாஷையில் முசல்லா) என்று தவறாக சுயநலத்துடன் மொழி பெயர்த்துள்ளனர்.

இப்போது சிந்தியுங்கள்! நபி(ஸல்) அவர்கள் எவ் விதத் தொழுகை விரிப்பும் இல்லாமல் மண் தரையில் தான் தொழுதார்கள் என்பதற்கு பல ஹதீஃத் ஆதாரங் கள் இருக்கின்றன. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உலகம் முழுவதும் தொழுமிடமாக ஆக்கித் தந்துள்ளான். இந்தச் சலுகை இறுதி உம்மத்தாகிய நமக்கு மட்டுமே கிடைத்த சலுகை. அறிவியல் முன்னேற்றம் காரண மாக மண் தரை, சிமெண்ட் தரையாக முன்னேறியது. இப்போதோ அந்த சிமெண்ட் தரையும் முன்னேறி பளிங்கு போல் காட்சி தரும் மார்பிள், மொசைக் தரை யில் பள்ளி கள் காட்சி அளிக்கின்றன. அவற்றின் மேல் உணவிட்டுச் சாப்பிட முடியும். அந்தளவு சுத்தமாக இருக்கின்றன. மிக எளிதாகச் சுத்தப்படுத்தவும் முடி யும். இவர்கள் விரிக்கும் பாயிலோ, கார்ப்பெட்டிலோ, தொழுகை விரிப்பிலோ (மவ்லவிகள் பாஷையில் முசல்லா) அப்படிப்பட்டச் சுத்தத்தைப் பார்க்க முடி யுமா? ஒருபோதும் முடியாது.

பாயிலிருக்கும் சுத்தத்தைக் கூட கார்ப்பெட் டிலோ, இமாம்களுக்காகப் பிரத்தியேகமாக விரிக்கப் படும் விரிப்பிலோ (முசல்லா(?)) பார்க்க முடியாது. இந்த நிலையில் இம்மூட முல்லாக்கள், பாய் விரிக்கப் பட்டிருந்தாலும், அதற்கு மேல் இவர்களின் கண் ணைக் கவரும் பல டிசைன்களில் இவர்களை வழி கெடுப்பதற்கென்றே யூதர்கள் திட்டமிட்டுத் தயாரித் துத் தந்த தொழுகை விரிப்பு (முசல்லா(?)) அனைவருக் கும் தொழுவதற்கென்று கார்ப்பெட் டிசைன், டிசைன் களாக விரிக்கப்பட்டிருந்தாலும், அதன் மேல் இன் னொரு டிசைன் நிறைந்த தொழுகை விரிப்பு (முசல்லா(?)) இதிலென்ன பெருமை? நபி(ஸல்) அவர் களே விரும்பாத இந்த வீண் பெருமை இவர்களுக்குத் தேவையா? 7:146 குர்ஆன் வசனம் இவர்கள் கண்ணில் படவில்லையா? ஆம்! இம்மவ்லவிகளின் வீண் பெருமை காரணமாக இம் மவ்லவிகள் குர்ஆனின் வசனங்களை உள்ளது உள்ளபடி விளங்குவதை விட் டும் இவர்களை அல்லாஹ்வே திருப்பி விடுகிறான். இவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் குர் ஆன் நேரடி வசனங்களைக் காட்டினாலும் அவற்றை நம்பி ஏற்க இம்மவ்லவிகள் தயாரில்லை. நேர்வழியை அவர்கள் ஏற்கத் தயாரில்லை. கோணல் வழிகளையே நேர்வழியாகக் கொண்டு அவர்களும் வழிகெட்டு, அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் பெருங் கொண்ட முஸ்லிம்களையும் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார் கள். (பார்க்க : 33:36,66-68) நாங்கள்தான் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்கத் தைக் கரைத்துக் குடித்த மேதைகள் என வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் இறுதியில் போய்ச் சேர்வது நரகம் என்பதை நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங் கள் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பலமுறை அந்நஜாத்தில் மீண்டும் மீண்டும் எடுத் தெழுதியுள்ளோம். அன்றாடம் குர்ஆனை தொடர்ந்து பொருள் அறிந்து படித்து வருகிறவர்கள் மட்டுமே இம்மவ்லவிகளின் தாஃகூத் என்ற ஷைத்தானிய நிலையை அறிய முடியும்.

இம்மவ்லவிகளின் பொய்ப் பிரசாரத்தை நம்பி குர்ஆன் நமக்கு விளங்காது, மவ்லவிகளுக்குத்தான் விளங்கும் என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்ப வர்கள் ஒருபோதும் நேர்வழி பெற முடியாது. இம் மவ்லவிகள் பின்னால் நாளை நரகில் வீழ்ந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:36,66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36:45 இந்த வசனங்கள் அனைத்தும் உறுதிப் படுத்துகின்றன. நேரடியாக குர்ஆனிலிருந்து படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே இம்மவ்லவிகளின் வசீகர, சூன்ய, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, 3:103 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து குர் ஆனைப் பற்றிப் பிடித்து 6:153 வசனம் கூறும் ஒரே நேர்வழி (வேறு வழியே இல்லை) பெற்று நேர்வழி நடந்து அல்லாஹ்வின் பூரண திருப்தியுடன் சுவர்க் கம் நுழைய முடியும். அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: