ஜல்லிக்கட்டும் உல்டாஃபிகளும்….

in 2017 ஜுன்

செய்யது அஹமது.

பூமியில் குழப்பம் செய்யாதீர்கள் என்று அவர் களிடம் சொன்னால் நிச்சயமாக நாங்கள் (மத) நல்லிணக்கம் ஏற்படுத்துகிறவர்கள், சீர்திருத்தவாதி கள் என்று சொல்கிறார்கள். 2:11
அப்படியில்லை அவர்கள் குழப்பவாதிகள்தான். (பசுத்தோல் போர்த்திய புலிகள்தான்) 2:12
அவர்கள் (தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்ட அஞ்சும்) கோழைகள். 9:56

(இந்) நயவஞ்சகர்கள் உங்களிடம், நிச்சயமாக “”முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று சாட்சி சொல் கின்றனர். (சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லாத) இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய் தான் சொல்கின்றனர் என்று அல்லாஹ் சாட்சி சொல்கிறான் நிச்சயமாக முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இங்ககும் இந்துக்கள் விடியற்காலையே நாளின் ஆரம்பமாகக் கொள்கின்றனர். 63:1

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் இரண்டு. ஒன்று இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பது. இரண்டாவது முஹம்மது நபி(ஸல்) அவர் கள் காட்டிய வழிப்படி மட்டுமே வாழவேண்டு மென்பது. இறைவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டுமென்பதிலே முஸ்லிம் சமுதாயம் இறந்த வர்களையயல்லாம் வழிபடுகிற ஒரு தவறான காரி யத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனைக் கண்டித்து சீர்திருத்துகிற விதமாக கடந்த ஆண்டு திருச்சியில் ´ஷிர்க் ஒழிப்பு என்ற பெயரில் ஒரு மிகப் பெரிய மாநிலம் தழுவிய மாநாடு நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையைத்தான் இஸ்லாத்தின் பெயரால் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிற வகையில் தமிழகத்தினுடைய எல்லா மாவட்டங்களிலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ், முஹம்மத் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார்கள் என்ற தலைப்பின் கீழ் தொடர்ச்சியாக மாநாடுகளை நடத்தி முஸ்லிம்களுக்கிடையிலே தூய்மையான இஸ்லாம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏன் கலந்து கொண்டது என்று யஹச். ராஜா கேட்டிருக்கிறாரே?

பதில் : கேள்வியே வித்தியாசமா இருக்கிறதே! தவ்ஹீத் ஜமாஅத் ஏன் கலந்து கொண்டது என்றால் தமிழ்நாடே கலந்து கொண்டது. (நாங்கள் கலந்து கொள்ளப்படாதா?)
நீதிமன்றமாக இருந்தாலும் சரி, அரசாங்கமாக இருந்தாலும் சரி காலம் காலமாக மக்களிடத்திலே கடைபிடிக்கப்படுகிற ஒரு பண்பாடாக, கலாச்சார மாக, வழிபாடாக, நம்பிக்கை சார்ந்த ஒன்றாக பயன்பாட்டிலே இருக்கிற ஒன்றில் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளே மூக்கை நுழைப்பது சரியல்ல.

இது மீடியாக்காரர்களிடம் பக்கீர் முஹம்மது அல்டாஃபி சொன்னது. கொஞ்சம் பின்னோக்கி போய், ஒரு நான்கு வருடங்களுக்கு முன் இவர்கள் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போமா!

அலங்காநல்லூர் அநியாயம்! அனுமதிக்கும் அரசாங்கம்…. ஏகத்துவம், – ஜனவரி 2013
வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெறும் பொங்கல் தினத்திலும் நடக்கப் போகின்றது. இந்தப் பொங்கல் வருவதற்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பழையன கழிதல் என்ற அறியாமையின் அடிப்படையில் கொளுத்தப்படும் பொருட்களிலிருந்து கிளம்புகின்ற புகை மண்டலத்தால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடுகின்றது. அதற்குப் பின்னால் பட்டாசுகளின் புகை மண்டலம், மொத்தத்தில் புவி மண்டலம், புகை மண்டலமாக மாறும் அளவுக்கு மாசாகிவிடும். பொங்கல் என்றால் நல்ல விளைச்சல் கொடுத்ததற்காகப் பூமிக்கும், அதற்கு ஒளி தருகின்ற சூரியனுக்கும், வேளாண்மைக்கு உதவு கின்ற மாட்டிற்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து இவை அனைத்திற் கும் வழிபாடு செய்யும் நாள் எனக் கருதப்படு கின்றது.
இது நாளடைவில் பொங்கல், அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், மறுநாள் காணும் பொங்கல் என மூன்று நாட்களாக மாறியது. மாட்டுப் பொங்கல் என்ற பெயரில் ஒரு பக்கம் மாட்டை வணங்குகின்றனர். மறுபக்கம் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர்.

ஐந்தறிவை அடக்க ஆறறிவு போதும் :
ஜல்லிக்கட்டை வீர விளையாட்டு என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பகுத்தறிவு அடிப்படை யில் இவர்களின் வீர விளையாட்டைச் சற்று பார்ப்போம். வீரம் என்றால் என்ன? தனக்குள் சரி சமமான அல்லது தன்னை விட பலத்தில் சிறந்த மனிதனுடன் மோதினால் அதை வீரம் என்று கூறலாம்.

ஆனால் இவர்கள் தன்னை விடக் கீழ் நிலையி லுள்ள ஆறறிவு இல்லாத ஓர் அற்பப் பிராணியுடன் மோதுகின்றார்கள். தனக்கு இருக்கும் வீரத்தைச் சோதிப்பதற்காக மோதுகின்றான் என்பது அந்தக் காளை மாட்டிற்குக் கொஞ்சமாவது தெரியுமா? களத்தில் நிற்கும் ஐந்தறிவுப் பிராணி யான காளை மாடு, தனக்கு எதிரே நிற்பவர்கள் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றது. அதனால் அது தன்னை எப்பாடு பட்டேனும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என் பதற்காகத் தப்பிக்கவும் தற்காக்கவும் முயற்சிக்கின் றது. இப்படி ஓர் ஐந் தறிவுப் பிராணியுடன் ஆறறிவு மனிதன் மோதுவது எப்படி வீரமாகும்?

ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகள் :
என்னதான் மனிதன் வீரனாக இருந்தாலும் நிராயுதபாணியாக இருக்கும்போது அவனைச் சூழ்ந்து கொண்டு ஒரு பத்துப் பேர் தாக்கினால் அவன் பிழைக்கமாட்டான். இதுதான் யதார்த்தமும் உண்மையுமாகும். சினிமா படத்தில் வேண்டுமென் றால் ஒரு கதாநாயகன் பத்துப் பேரை அல்ல. நூறு பேரை ஒரே நேரத்தில் அடக்கலாம். நடிப்பில் அது சாத்தியம். ஆனால் நடப்பில் அது சாத்தியமல்ல.

இங்கே காளை மாட்டை மடக்குகிறேன் என்ற பெயரில் ஆயிரம் பேர் அதைச் சுற்றி வளைத்து வதை செய்கின்றனர். இதற்குப் பெயர் வீரமா? அல்லது அநியாயமா? ஒரு காளையை அடக்க ஆயிரம் கோழைகளா? இதற்கு எப்படி வீர விளையாட்டு என்ற சொல்ல முடியும்?

ஆனையை அடக்க அங்குசம் போதும் :
மனிதனை விட எடையிலும் எடுப்பிலும் பெரிய தோற்றம் கொண்ட யானையை மனிதன் ஒரு போதும் தன் பலத்தால் அடக்க முடியாது, வெல்லவும் முடியாது. அறிவால் தான் வெல்ல முடியும். ஓர் அற்ப ஆயுதத்தை அங்குசத்தை வைத் துக் கொண்டு அதை எளிதில் அடக்கி விடலாம்.
இதைப் போன்று சிங்கம், புலி போன்ற கொடிய, கோர மிருகங்களை அறிவு என்ற ஆயுதத் தைப் பயன்படுத்தி எளிதில் மனிதன் அடக்கிக் கூண்டுக்குள் அடைத்து விடலாம்.

மாட்டை அடக்க சாட்டை போதும்:
இம்மாபெரிய மிருகங்களே ஆயுதங்களில் அடங்கும்போது, மாட்டை அடக்கச் சண்டைக் களமா தேவை? ஒரு சாதாரண சாட்டைக் கம்பு போதும். எனவே மாட்டுடன் மோதுவதை வீர விளையாட்டு என்று கூறுவது பகுத்தறிவு அடிப் படையில் கடைந்தெடுத்த பைத்தியக்காரத் தனமான வாதமாகும்.

மாடுகள் மனிதர்களிடம் பழகி விடும்போது அவன் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக் கின்ற நன்றியுள்ள பிராணியாகும். பழகிவிட்டால் தன்னைவிட உடலிலும் உருவத்திலும் சிறிய ஒரு சிறுவன் இழுக்கின்ற இழுப்புக்கு இணங்கி விடும் ஓர் அரிய ஜீவனாகும். வயலை உழுதல், வண்டி இழுத்தல், தண்ணீர் இறைத்தல், சூடடித்தல் என மனிதச் சமுதாயத்திற்குத் தேவையான அவ்வளவு ஆக்கப் பணிகளையும் செய்கின்ற ஓர் அற்புதமான, அருமையான பிராணி. இந்தப் பிராணிக்காக இறை வனுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். இதற்கு நேர்மாறாக அந்தப் பிராணியை வதை செய்கின்றார் கள். நன்றி மறந்த இந்த மனித வர்க்கத்தினர்.

ஒரு பக்கம் வணக்கம்; மறுபக்கம் வதைப்பு:
இதில் வேடிக்கை என்னவென்றால் மாட்டுக்கு நன்றி சொல்லத்தான் மாட்டுப் பொங்கல்!
ஒருபக்கம் மாட்டை வணங்கவும் செய்கின்ற னர். மறுபக்கம் மாட்டை வதைக்கவும் செய்கின்றனர்.

வதைக்கும் விதங்கள் :
1. ஒரு பெருங்கூட்டம் கழுத்தில் கட்டப்பட்டிருக் கும் கயிற்றை முழு வேகத்தில், மூர்க்கத்தனமாக, அதன் முன்பக்கமாக இழுக்கின்றனர். இதன் காரண மாக அதன் கழுத்தில், தொண்டைப் பகுதியில் அந்தக் கயிறு அறுத்து, அதனால் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிகின்றது.
2. அதன் வாலைச் சுருட்டி இடது பக்கமாகச் சுண்டி இழுத்தல், வலி தாங்க முடியாமல் துள்ளிக் குதிக்க ஆரம்பிக்கின்றது.
3. அதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் விதமாக, அதன் பின்னங்கால்கள் இரண்டையும் அப்படியே பின்பக்கமாகத் தூக்கி அதை வேகமாகத் தரதரவென்று இழுத்தல்.
4. முரட்டு இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவினர் முதுகில் உள்ள திமிலில் ஏறுகின்றனர். அந்தக் காளை யைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற் காக, கைகளில் பிடிக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் விரல்களில் வளர்த்திருக்கும் கூரிய நகங் களைக் கொண்டு அதன் உடலில் பாய்ச்சுகின்றனர். இந்தக் கோரச் செயல் காளையின் உடலில் இரத்த ஊற்றுக்களைத் தோற்றுவிக்கின்றது.
5. மற்றொரு முரட்டு சாரார் அதன் கொம்பு களைப் பிடித்து இழுத்து, சரமாரியாக இடைவிடா மல் மொத்தித் தள்ளுகின்றனர்.
6. வலுக்கட்டாயமாக மலிவு சாராயத்தை அதன் வாயில் ஊற்றிக் கொடுமைப்படுத்துகின்றனர். இதன் விளைவால் போதையுண்ட அந்த அற்பப் பிராணி, வெறியேறி மூர்க்கத்தனமாக, முரட்டுத் தனமாக மனிதர்களைத் தாக்க வருகின்றது.
7. காளையின் கண்களில் மிளகாய்த் தூள் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து அதன் கண்களை எரிச்சல் அடையச் செய்து அதனை வெறியேற்றச் செய்தல்.
8. காணும் காணாததற்கு, கத்தியால் அதன் உடலில் குத்தி அதைக் கிளறி எழச் செய்தல்.
9. நமக்கு இடையூறு செய்கின்ற ஏதாவது ஒரு பிராணியைக் கைத்தடியால் அல்லது சாட்டைக் கம்பால் தாக்குகின்ற போது அதைக் கண்டு பயந்து தன் கண்களுக்குத் தெரிகின்ற வாசல் வழிகளில் விழுந்து தப்பி ஓடி தம்மைக் காத்துக் கொள்கின்றன.
ஆனால் இந்த ஜல்லிக்கட்டில் சுற்றி தடுப்புகளை வைத்துத் தடுத்து, மனித மிருகங்கள் முற்றுகையிட்டு நிற்கும்போது அந்தக் கொடுமையிலிருந்து தன் னைத் தப்புவித்து, தற்காத்துக் கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கின்ற இந்த அற்பப் பிராணியைப் பார்த்து ஈவு இரக்கமுள்ள மனிதன் அழாமல் இருக்க முடியாது. இவ்வளவு கொடுமையை ஜல்லிக்கட்டு என்ற பெயரில் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

மூன்று கொடுமை முறைகள் :
காளையை அடக்குவதற்குக் கோழைகள் மூன்று விதமான கொடுமையை கொடூரங்களைச் செய்கின்றனர்.
1. காளை நேரான பாதையில் பல மீட்டர் தூரம் விரட்டி ஓட வைக்கப்படுகின்றன. இரு பக்கங்களி லும் காளைகளை அடக்கும் கோழைகள் நிற்பர். பார்வையாளர்களும் நிற்பர். பார்வையாளர் களை விட்டுத் தடுப்பதற்குத் தடுப்புகளோ, கம்பு களோ எதுவும் இருக்காது. நூற்றுக்கணக்கானோர் இந்தக் காளையின் மீது பாய்ந்து அடக்குவார்கள். இந்தக் கோரச் செயல் அந்தக் காளையின் உடலில் இரத்தக் காயங்களை ஏற்படுத்தும்.
மஞ்சு விரட்டு :
2. காளைகளை அடக்குகின்ற வகைகளில் இது மிகக் கொடுமையான முறையாகும். பற்பல குழுக் களால், பல கிலோ மீட்டர் தூரத்திற்குக் காளை துரத்தப்படுகின்றது. ஓரிடத்தில் கூட காளை தன் ஓட்டத்தை நிறுத்த முடியாது. ஒவ்வொரு குறிப் பிட்ட கிலோ மீட்டர் முடியும் இடத்திலும் வேறொரு குழுவினர் எதிர்பார்த்து நிற்கின்றனர். தங்கள் இடத்திற்குக் காளை வந்ததும் அவர்கள் துரத்துகின்றனர்.

இப்படி ஒரு கொடூரமான, இடைநில்லாத தொடர் ஓட்டத்தின் காரணமாக நீர்ச்சத்தை இழந்து நிலைகுலைந்து போய் விடுகின்றது. ஏற்கனவே ஒவ்வொரு குழுவினரின் தாக்குதலுக்கு இலக்காகி, தளர்ந்து, அது சரணடையும் தருவாயில் கழுத்தில் தொங்கும் அதன் மணியின் கயிறை மிகக் கடுமையாக ஒரு முரட்டு வாலிபன் இழுக்கின்றான். அதன் கழுத்தில் ரத்தம் சொட்டுகின்ற வகையில் புண் ஏற்படுகின்றது. இந்த அடக்குமுறையைத் தான், அத்துமீறலைத் தான் வெற்றி என்று மார்தட்டிக் கொள்கிறான்.

வடம் :
3. பெரிய வடக்கயிற்றால் காளை கட்டப்படுகின் றது. பதினைந்து அடி நீளக் கயிற்றில் கட்டுண்டு கிடக்கும் காளையை 9 கோழைகள் அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை அடக்குவர். அதாவது வதை செய்வார்கள்.

இந்த மூன்று விதமான முரட்டுத்தனமான கொடுமைகளை, மூர்க்கத்தனமாக ஒரு கூட்டம் அப்பாவியான ஓர் அற்பப் பிராணியின் மீது நடத்து கின்றது. இதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மரணமாகும் மாமன்றங்கள் :
இந்த நாட்டில் 1960ம் ஆண்டில் இயற்றப்பட்ட மிருக வதை தடுப்புச் சட்டமெல்லாம் இருக்கின்றது. மதம் என்றதும் சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் அனைத்தும் மவுனமாகி விடுகின்றன. ஏன்? மரணமாகி விடுகின்றன.

செயல்படுத்தப்படவிருந்த சேது சமுத்திரத் திட்டத்தைச் சீர்குலைக்கும் சக்திகள் ராமர் பாலம் என்ற மதச் சாயத்தைப் பூசிய மாத்திரத்தில் நீதிமன்றம் கூட மரணமாகி விடுகின்றது. பாபரி மஸ்ஜித் வி­யத்திலும் இதே கதிதான். குறைந்த பட்சம் இதில் நடக்கும் மனித உயிர்ப்பலிகளைத் தடுக்கும் விதமாக நீதிமன்றங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம்.

இடையில் நீதிமன்றங்கள் ஜல்லிக்கட்டு வி­யத் தில் ஆர்வம் காட்டின. அதன் பின்னர் அவற்றின் ஆரவாரமும் அடங்கிப் போய்விட்டது. கண் காணிப்பு, கட்டுப்பாடு என்ற போர்வையில் இந்த அநியாயம் அரங்கேறுகின்றது. இதனால் மிருகங்கள் ஈவு, இரக்கம், மனிதாபிமானம், அன்பு ஏதுமின்றி கொடுமைக்கும் கொடூரத்திற்கும் உள்ளாக்கப்படு கின்றன. அணு அணுவாக வதைக் கப்படுகின்றன. மனித உயிர்களும் பலியாக்கப் படுகின்றன.

பண்டிகை நாளா? பலி நாளா?
உயிர்களை வதைக்கின்ற இந்நாளை பண்டிகை நாள் என்பதா? அல்லது பலி வாங்கும் நாள் என்பதா? இந்த நாளில் பலியான, காயமடைந்த உயிர்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
ஸ பிப்ரவரி 17, 1999 திருச்சி கூத்தப்பர் கிராமத்தில் 17 வயது இளைஞர் மாடு முட்டி கொல்லப்படுகின் றார். 100க்கும் அதிகமானோர் காயமடைகின்றனர்.
ஸ பிப்ரவரி 24, 2002 புதுக்கோட்டை, திருவாப் பூரில் ஒருவர் கொல்லப்படுகின்றார். 30 பேர் காயமடைந்தனர்.
ஜனவரி 17, 2004 மதுரை அலங்காநல்லூரில் ஒருவர் கொல்லப்பட்டார். 160 பேர் காயமடைந் தனர்.
ஜனவரி 18, 2005 அதே அலங்காநல்லூரில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் காயமடைந்தனர்.
இதே நாளில் சிவகங்கையில் 2 பேர் கொல்லப் பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
ஜனவரி 2006, தேனி பல்லவராயன்பட்டியில் 2 பேர் கொல்லப்பட்டனர். 84 பேர் காயமடைந்தனர்.
2007, சேலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 21 பேர் காயம்.
2008, பிப்ரவரி 23, புதுக்கோட்டையில் ஒருவர் சாவு, 140 பேர் காயம்.
2009, தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூரில் 11 பேர் காயம்.
2010, புதுக்கோட்டையில் பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டார், 64 பேர் காயம்.
மதுரை பாலமேட்டில் 22 வயது இளைஞர் பலி, 35 பேர் காயம்.
சிவகங்கையில் ஒருவர் பலி, 30 பேர் காயம்.
இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. மாடு முட்டி சாவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், இதைக் காண்பதற்குக் கூடு கின்ற கூட்டத்தில் ஏற்படுகின்ற நெரிசலில் சிக்கி, மிதி பட்டும் சாகின்றனர்.

இவ்வளவு உயிர்கள் பலியான பின்பும், பறி போன பின்பும் அரசாங்கம் வாளாவிருக்கின்றது. எத்தனை உயிர்கள் சரிந்து போனாலும் பரவா யில்லை. தங்கள் வாக்கு வங்கி சரிந்து போகக் கூடாது என்பதில் ஆளுகின்ற, எதிர்க்கின்ற கட்சிகள் குறி யாக இருக்கின்றன.
இப்படி பண்டிகை நாளில் உயிர்ப் பலி வாங்கு கின்ற, வீர விளையாட்டு என்ற பெயரில் ஒரு கோர விளையாட்டை அரசாங்கம் அனுமதிப்பது மாபெரும் அநியாயமாகும்.
இதுபோன்ற கோர விளையாட்டுக்கள் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் நடைபெறுகின் றது. ஆங்கிலம் பார்த்துப் போடவும் என்ற பெயரில் வேன்கள் உலா வருவதைப் பார்க்கலாம். காளையுடன் போராடுபவர்ளுக்குத் தான் இந்தப் பெயர். இதன் மூலம் எந்த அளவுக்கு இந்தப் பைத்தியக்காரத்தனமான விளையாட்டு மற்ற நாடுகளில் பிரபலமாக உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்படிக் காளையுடன் சண்டை போடுபவன் ஓர் அரக்கன். அறிவாளியல்ல, மூளையில்லாத முட்டாள், மூடன் அதை அனுமதிக்கின்ற அரசாங்கம் ஓர் அநியாயத்தை அரங்கேற்றுகின்றது.
உயிர் காக்க வேண்டிய அரசு, வாக்கு வங்கிக்காக உயிர் குடிக்கும் வேலையைச் செய்கின்றது. இந்த அநியாயம் தான் தமிழகத்தில் அலங்காநல்லூரிலும் இன்னும் பிற பகுதிகளிலும் நடக்கின்றது. இதற்குத் தீர்வு இஸ்லாம் தான்.

ஆடு, மாடுகளை அறுத்து உணவுக்குப் பயன் படுத்தச் சொல்கின்ற இந்த மார்க்கம் அவற்றை வதை செய்யக்கூடாது என்று அழுத்தம் திருத்த மாகச் சொல்கின்றது. அப்படி வதை செய்பவர் நரக வாதி என்றும் குறிப்பிடுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண் ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) வி­யத் தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத் தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் நீ அதைக் கட்டி வைத்து அதற்குத் தீனி போடவுமில்லை. தண்ணீர் தரவுமில்லை, அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று அல்லாஹ் கூறினான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) நூற்கள்: புகாரி: 2385, முஸ்லிம் 4160

அதே சமயம், ஒரு நாயை துன்பத்திலிருந்து காப் பாற்றியவர் சுவனம் செல்கின்றார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த் தார். உடனே அவர் (தாம் அணிந்திருந்த) காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரீ:173, 2363)

இப்படி ஒரு மறுமை நம்பிக்கை இருந்தால் தான் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்குக் கூட வதையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

இதுதான் இவர்கள் சுயரூபம். இவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொல்கிறார்கள்.
மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை வே­ம் போடுபவன்தான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு பேச்சு பேசுகிறான். அவர்களி டம் செல்லும்போது இன்னொரு பேச்சு பேசுகிறான். முஸ்லிம் : 5076.

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களி லேயே மிகவும் மோசமானவனாக இருப்பவன் இரட்டை வே­ம் போடுபவன்தான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு பேச்சு பேசுகிறான். அவர்களிடம் செல்லும்போது இன்னொரு பேச்சு பேசுகிறான். புகாரீ : 6058

Previous post:

Next post: