இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம்!! நபி(ஸல்) கால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் சிந்திப்போம்! சீர்பெறுவோம்!! 1. குருடனும் பார்வையுடையவனும் ஒப்பாகமாட்டார்கள். (அதுபோல) ஈமான் கொண்டு அதற்கேற்ப நற்செயல்கள் செய்பவர்கள் தீமை செய்பவர்களுக்கு ஒப்பாகமாட்டார்கள். உங்களில் குறைவானவர்களே (இதனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள். (சிந்தனைக்கும் படிப்பினைக்கும் உரிய இறைவாக்குகள்) அல்முஃமின் 40:58) 2. குருடரும், பார்வையுடையவரும் சமமானவரல்ல, இருளும், ஒளியும் (சமமானது) அல்ல. நிழலும், வெயிலும் (சமமானது) அல்ல. உயிருள்ளவையும், இறந்தவையும் சமமானவை அல்ல. நிச்சயமாக […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025 ஏப்ரல் மாத தொடர்ச்சி… இதனால் தொடராக நாற்பது நாட்கள் நோன்பிருந்து தூர்சீனா மலையின் புனித பள்ளத்தாக்கிற்குச் சென்று படாதபாடு பட்டுப் பெற்றுவந்த தவ்ராத் நெறிநூல் எழுதப்பட்ட புனித பலகை ஏட்டை நிலத்தில் வீசி எறியும் அளவிற்குப பொறுமையை இழந்து இறைததூதர் மூஸா(அலை) அவர்களுக்கு மன வேதனையையும், கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு […]
வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் ஏப்ரல் மாத தொடர்ச்சி…. இறையருளால் இந்த ஆண்டு 2025, ஜனவரி மாதம் முதல் வெளிவரும் “வருமுன் காப்போம்‘ கட்டுரை பரவலாக வாசகர்களிடமிருந்து எதிர்பார்த்தத்திற்கு மேலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். பொதுவாக மார்க்க ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் சரியான விழிப்புணர்ச்சி இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மார்க்க ரீதியாக சரியான விழிப்புணர்ச்சி ஏற்பட சுமார் 40 ஆண்டுகளாக அந்நஜாத்தில் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. ஊசி துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை சொர்க்கத்தில் நுழையாதவர்கள் யார்? அல்லாஹ்வின்வசனங்களைபொய்ப்பித்துபெருமையடிப்பவர்கள். 2. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் என்ன கேட்பார்கள்? தண்ணீர்அல்லதுஅல்லாஹ்வழங்கியவற்றையோஎங்கள்மீதுஊற்றுங்கள். அ.கு. 7:50 3. வெட்கத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்? ஈமான்என்னும்இறைநம்பிக்கையின் ஒரு கிளை ஆகும். புகாரி: 4. நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று எதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? அன்சாரிகளை : வெறுப்பது. புகாரி: 17 5. நூஹ்(அலை) அவர்கள் சமூகத்தின் பிரமுகர்கள் […]
இறைநூல் (குர்ஆன் !) அய்யம்பேட்டை A. நஜ்முதீன் குர்ஆனின் வரலாறு என்பது வந்து, வாழ்ந்துவிட்டுப் போனவர்களின் வாழ்க்கை வரலாறு போல் அல்ல; மாறாக சாதனைகளைத் தந்து பல சரித்திர மனிதர்களை உருவாக்க உறுதுணையாக அன்றும், இன்றும், என்றும் இருப்பதாகும். எப்படி சுடப்படாத தங்கம் ஆபரணமாவதில்லையோ, துளையிடப்படாத மூங்கில் புல்லாங்குழலாக ஆவதில்லையோ, உளியின் வலிக்கு பயந்த கற்கள் சிற்பமாவதில்லையோ அதுபோல் குர்ஆனை படிக்காத அதிலுள்ளதை சிந்திக்காத அதை பின்பற்றாத எந்த மனிதனின் வாழ்க்கையும் முழுமைப் பெற்றதாக ஆவதில்லை. குர்ஆனை […]
புதிய வக்ப் மசோதா திருத்தவா? திருடவா? தற்பொழுது மீடியா, சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மத்தியிலும் TRENDING NEWS (தலைப்புச் செய்தியாக) இருப்பது புதிய வக்ப் மசோதாவைப் பற்றியே. (இது சில வாரங்கள்தான், பின்பு இதற்கு முன்பு நடந்த பல விடயங்களை கடந்து போனது போல் இதையும் கடந்து போய்விடுவார்கள்) வக்ப் மசோதா இப்போதுதான் புதிய தாக திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு திருத்தம் செய்யப்படவே இல்லையா? என்றால் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. ஆனால், […]
கல்வியின் பயன்! M. சையத் முபாரக், நாகை கல்வியின் அவசியம் : “…(நபியே!) அறிந்தவர்களும், அறியாதவர் களும் சமமாவார்களா? என்று நீர் கேட்பீராக! அறிவுத்திறனுடையோர்தான் உபதேசம் பெறுவர்.” (அல்குர்ஆன் 39:9) அல்குர்ஆன் உண்மை; அது நேர்வழி காட்டி (பார்க்க : 34:6) என்றும் அல்லாஹ்விடமிருந்து அருளப்படுவது உண்மை என்று அறிபவர் பார்வையில்லாதவரைப் போலாவாரா? (பார்க்க : 13:19) என்றும் அல்குர்ஆன் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது ஒவ் வொருவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்பதற்காக. ஆகவே, நாம் கல்வியறிவு […]
தலையங்கம் : அந்நஜாத்தும்! நாற்பதாம் ஆண்டும்! அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்… அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அந்நஜாத் தனது 39ம் ஆண்டுகள் பணியை தொய்வின்றி முடித்துக்கொண்டு 40ஆம் ஆண்டில் பணியை துவக்குகிறது. அல்ஹம்துலில்லாஹ். மர்ஹும் அபூ அப்தில்லாஹ் மற்றும் சில தனி மனிதர்களின் முயற்சிக்கு பிறகே பல தெளிவுக்கு பிறகே “”அந்நஜாத்” 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முதல் இதழ் ஆரம்பிக்கப்பட்டு வெளிவரத் தொடங்கி இறைவன் கிருபையால் இன்றும் “”பாதை மாறா பயணம்” தொடர்கிறது. இதுவரை பயணம் […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 மார்ச் தொடர்ச்சி… சிதறிய சிந்தனை ஒன்றுபடும்போது! இதுபோல் ஒரு மனிதன், ஒரு கல்லையோ ஒரு சிலையையோ, ஒரு மகானையோ, வேறெதையோ மையமாக வைத்து, அவனது சிதறும் சிந்தனையை ஒன்றுபடுத்தினால், இந்த நிலைகளும், தோற்றங்களும், காட்சிகளும் ஏற்படவே செய்யும். அவனிடத்தில் சில, பல அதிசயங்களும் நிகழ்ந்து விடலாம். இதில் வியத்தற்கொன்றுமில்லை, இது அனைத்து மதவாதிகளிடமும் காணப்படும் ஒன்றாகும். இதனால்தான் அவரவர்கள் இருக்கக்கூடிய மதங்களிலேயே உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தங்களது மதம் தங்களுக்கு […]
மிகவும் ஆபத்தான (Danger) மனிதர்கள் யார்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக மனிதர்களில் ஆண், பெண் என இரு சாரார்கள் உண்டு. இந்த இரு சாரார் களையும் சாராத மூன்றாவதாக ஒரு சாரார் உண்டு. திருநங்கை என்ற பெயரில் உலகம் முழுவதும் சிலர் பரவியுள்ளனர். இந்த மூன்றாம் வகுப்பினரால் பல அனாச்சாரங்கள் நடைபெற்று வருவது பலரும் அறிந்த ஒன்று. இவர்களை நாம் அடையாளம் காணமுடியும். (அவர்களின் செயலாலும், பேச்சாலும் ஆடை அலங்காரங்களாலும் அவர்களை (திருநங்கைகளை) இலகுவாக அடையாளம் […]
ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம் நபிகால இஸ்லாமிய ஒற்றுமை; பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்! முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : (இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவுறுத்தினானோ அதையே (அந்த இஸ்லாத்தையே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்) மார்க்கமாக்கியிருக்கின்றான். (நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்ததும் (இறைத்தூதர்கள்) இப்ராஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளையாக) அறிவுறுத்தியதும், (இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்பதுதான். இணை வைப்போரை எதன் (இஸ்லாத்தின்) பக்கம் அழைக்கிறீர்களோ […]
குர்ஆன், ஹதீதைப் பற்றிப் பிடித்துக்கொள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜிலானி(ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளை விட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய் யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணை வைக்கக் கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப் பிரசாரமும் செய்யப்படுகின்றது. “என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025 மார்ச் மாத தொடர்ச்சி… மதீனாவாசிகளுக்கும் அங்கு குடியேறிய யூதர்களுக்கும் சண்டை மூளும்போது “கடைசி காலத்தில் ஒரு நபி வருவார்” அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்” என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதைப் பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருக்கின்றார் கள். (ஜாதுல் மஆது, இப்னு […]
சும்மா கிடைக்குமா சொர்க்கம்! K. ரஹீமுத்தீன், குண்டூர் மறு பதிப்பு : அன்பு இஸ்லாமிய ஈமான் கொண்ட தோழர்களே, தோழியர்களே! அல்லாஹ் தனது திருகுர்ஆனில் உங்களில் சிலரைச் செல்வம் கொடுத்து சோதனை செய்வோம். (அத்தியாயமும் வசனமும் 3:186, 5:48, 6:165, 8:28,29) இதுபோன்ற சோதனைகளை உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திற்கும் செய்துள்ளோம், நபிமார்களுக்கும் செய்துள்ளோம். இப்படி சோதனை செய்து இச்சோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு, வெற்றி பெறப் போகிறவர்களுக்கு மட்டுமே தன்னுடைய வாக்குறுதியின்படி சொர்க்கம் தரப்படும் என்று நன்றாக தெரிந்தும் […]
சும்மா கிடைக்குமா சொர்க்கம்! K. ரஹீமுத்தீன், குண்டூர் மறு பதிப்பு : அன்பு இஸ்லாமிய ஈமான் கொண்ட தோழர்களே, தோழியர்களே! அல்லாஹ் தனது திருகுர்ஆனில் உங்களில் சிலரைச் செல்வம் கொடுத்து சோதனை செய்வோம். (அத்தியாயமும் வசனமும் 3:186, 5:48, 6:165, 8:28,29) இதுபோன்ற சோதனைகளை உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திற்கும் செய்துள்ளோம், நபிமார்களுக்கும் செய்துள்ளோம். இப்படி சோதனை செய்து இச்சோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு, வெற்றி பெறப் போகிறவர்களுக்கு மட்டுமே தன்னுடைய வாக்குறுதியின்படி சொர்க்கம் தரப்படும் என்று நன்றாக தெரிந்தும் […]
அ முதல் ஃ வரை எதைப்பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக மனிதர்களின் இயல்பு என்ன வென்றால் எதையயான்றையும் செய்வதாக இருந்தால் அதனால் என்ன பலன் என்பதை அறிய முதலில் விரும்புவார்கள். மேலும், ஏன் செய்யவேண்டும்? எப்போது செய்யவேண்டும்? எப்படி செய்யவேண்டும்? என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். அவ்வாறு தெரிந்தால் தான் அதை செய்ய முன்வருவார்கள். இந்த இயல்பு சாதாரண அடிமட்ட தொழிலாளர்களிடமிருந்து உயர் மட்ட கல்வியாளர்கள் வரை இருக்கக்கூடிய ஒன்றுதான். அதில் ஒன்றும் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பதும், பருகுவதும் எவ்வாறு வெளியேறும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? நறுமணமுள்ளஏப்பமாகவும், கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும். முஸ்லிம் : 5453 2. சித்ரத்துல் முன்தஹா வேரின் கீழ்பகுதியில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? நான்கு. ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை உள்ளேயும், யூப்ரபீஸ் நைல் இரண்டும் வெளியேயும். புகாரி : 3207 3. அஸ்ஸாமு அலைக்க என்றால் என்ன? உங்களின்மீதுமரணம்உண்டாகட்டும்என்றுபொருள். புகாரி […]
யார் அதிர்ஷ்டசாலி? N. அஹமது இப்ராஹிம், ஒரத்தநாடு தலைப்பை பார்த்தவுடன் வாசகர்களுக்கு “அந்நஜாத்‘ பத்திரிக்கை 40ஆம் ஆண்டை முன்னிட்டு ஏதோ பரிசு போட்டி வைத்து அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்க உள்ளது என வாசகர்கள் நினைக்கலாம். நாம் (“அந்நஜாத்‘) அவ்வாறெல்லாம் செய்யமாட்டோம், நமது வாசகர்களும் அவ்வாறு எதிர்பார்ப்பவர்கள் அல்ல என்பதையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம். பின்பு ஏன் “யார் அதிர்ஷ்டசாலி” என்ற தலைப்பை சூட்டியுள்ளீர்கள் என்று கேட்கலாம். பரிசு போட்டி நடத்தினால்தான் இந்த தலைப்பை வைக்கவேண்டும் […]
வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! அய்யம்பேட்டை பு. நஜ்முதீன் மார்ச் மாத தொடர்ச்சி…. நோயே என்னை நெருங்காதே! சென்ற ஜனவரி மாதம் (2025) முதல் மருத்துவ கட்டுரை தொடராக வருவதை வாசகர்கள் அறிந்த ஒன்று. இதுவரை சித்த வைத்தியம், ஹோமியோபதி வைத்தியம், அக்குபஞ்சர் மற்றும் அலோபதி மருத்துவத் தின் அவலங்களையும் எழுதி வந்தோம். மேலும் சென்ற இதழில் உடல் உறுப்புகளில் முக்கியமானதான மூளையைப் பற்றியும் அறிந்தோம். அல்ஹம்துலில்லாஹ். இந்த இதழில் […]
கவனம்! பெற்றோரே கவனம்!! M. சையத் முபாரக், நாகை மனிதனைத் தவிர, நிலத்தில் வாழும், நீரில் வாழும், வானில் பறக்கும் அனைத்து உயிரி னங்களும் தனது குட்டிகளை, குஞ்சுகளை சிறிது காலம் பாதுகாத்து வளர்க்கின்றன. அந்தக் குட்டிகளும் குஞ்சுகளும் பெற்றோரின் பாதையில் நடந்து, பக்குவம் அடைந்ததும் தன்னிச்சையாகச் செயல்படுகின்றன. ஆனால், நம் (மனித) இனத்தில் மட்டும் பெற்றோரை, சுற்றத்தாரைப் பார்த்து குழந்தைகள் கற்றுக் கொள்வதுடன், அவர்கள் நேர்த்தியாக வளர பெற்றோர்களின், மற்றவர் களின் வழிகாட்டலும், பயிற்சியும் தேவை […]