நபி(ஸல்) விட்டுச் சென்ற ஜமாத்துல் முஸ்லிமீன் எங்கே? S.H. அப்துர் ரஹ்மான் ஜமாத்துல் முஸ்லிமீன் நபி(ஸல்) விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையிலான ஜமாஅத், கலிமாவை ஏற்ற முந்தியவர்கள், மூமின்கள், முஸ்லிம்கள், முனாபிக்கள் (கலிமா சொல்லிய பின்பு சிலை வணக்கமும் புரிந்தவர்கள்) அனைவரும் ஒன்றாக இருந்த ஒரே தலைமையில் ஆன அல்ஜமாத். (ஹிஜ்ரி 1 -11 வரை) ஜமாத்துல் முஸ்லிமீன் நான்கு கலிபாக்கள் விட்டுச் சென்ற ஒரே அமீர் தலைமையில் ஆன ஜமாத், கலிமாவை ஏற்ற மூமின்கள், […]
ஸிஜ்ஜீன் என்றால் என்ன? எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. (அளவையிலும், எடையிலும், மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக! அவர்கள் எத்தகையோரென்றால், (தங்களுக்காக) மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து) வாங்கிக் கொள்கின்றனர். (ஆனால்) மற்ற மனிதர்களுக்கு அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் மோசடி செய்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர். அத்தகையோர் நிச்சயமாக, தாம் (மறுமை யில் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில் லையா? மகத்தான ஒரு நாளைக்காக, அதாவது […]
இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் நாடினால்)…? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல் முஸ்லிம்களிடையே மிகவும் பிரபலமான சொல்லாகும். எவ்வாறு “மாஷா அல்லாஹ்” என்ற சொல் பிரபலமானதாக இருக்கிறதோ அதைவிட பன்மடங்கு பிரபலமான சொல்லாகும் இது. அதாவது முஸ்லிம்களாக இருக்கக் கூடிய ஆண், பெண் இரு வகுப்பாரும் தன் வாழ்நாளில் பலமுறை உபயோகப்படுத்தக்கூடிய சொல்லாகும். “இன்ஷா அல்லாஹ்” என்ற இந்த சொல்லை உபயோகப்படுத்தாத முஸ்லிம்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு இது ஒவ்வொரு முஸ்லிம்களின் வாழ்வுடன் […]
பாவமன்னிப்பு கேட்டால்… இறைவன் மன்னிப்பானா? தண்டிப்பானா? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் “மனிதர்களின் தவறுகளுக்காக அவர்களை (உடனுக்குடன்) இறைவன் தண்டிப்பதாக இருந்தால் எந்த உயிரினத்தையும் பூமியின் மீது இறைவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும் நிர்ணயிக்கப்பட்ட நாள் வரை திருந்துவதற்காக அவர்களுக்கு அவகாசமும் வழங்குகிறான். அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட நாள் வந்து முடிந்ததும் (தண்டிக்கவும் செய்யலாம், மன்னிப்பும் வழங்கலாம். தன் அடியார்களை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். அ.கு. 35:45 மேற்கண்ட வசனத்தில் இறைவன் மூன்றுவித கருத்தை கூறுகிறான். முதலாவது: தன்னுடைய […]
பொய்க்கு மட்டும் பச்சைக் கொடியா? A.N. Trichy. போர் என்று வந்தால் அதில் முதலில் பலிகடாவாக ஆவது “உண்மை‘. அந்நாளில் (முதல் உலக போர், மற்றும் இரண்டாம் உலகப்போர்) வதந்திகள் வாய் வார்த்தை யாகத்தான் பரவின. ஆனால் இப்போது மீடியா மூலம் அது இறக்கை கட்டிப் பறக்கின்றன. அதிலும் இந்தியா–பாகிஸ்தான் போர் என்றால் இந்தியா மீடியாக்கள் பல வதந்திகளை பரப்புவதில் முழுமூச்சாக இருக்கின்றன. உ.ம். : கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பஹ்லகாம் தாக்குதலுக்கு பின்பு […]
அடையாள அட்டை…. N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு. இன்றைய நவீன உலகில் உலகிலுள்ள 95 சதவீத மக்களுக்கு அடையாள அட்டை உள்ளது. நமது இந்திய நாட்டிலும் ஆதார் கார்டு, பான்கார்டு, வோட்டர் கார்டு, ரேன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் கார்டு, மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு போன்ற பல அடையாள அட்டை சுமார் 90 சதவீத மக்களுக்கு உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை கொண்டு அவர் பெயர் என்ன, அவர் பிறந்த தேதி என்ன, அவருடைய முகவரி என்ன, […]
எளிமையான சொற்கள்! வலிமையான பலன்கள்!! M. சையத் முபாரக், நாகை. அல்லாஹ்விற்கு ஏற்ற, அவன் விரும்புகின்ற, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தச் சொற்களை (திக்ர்களை) நாம் சொல்லும்போது அதற்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் அறிவோம். அவைகளைப் பற்றித் தெரிந்தும் நாம் அவைகளைக் கூறாமல் தவிர்த்து விடுகிறோம். அதற்குக் காரணம், அதன் மதிப்பு இம்மையில் தெரியாததே. நாளை ஃபஜ்ர் தொழுகைக்கு பள்ளிவாச லுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 தரப்படும் என்று அறிவிப்புச் செய்தால், […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : சொர்க்கத்தில் ஆண்களுக்கு துணையிருப்பது போல் பெண்களுக்கு துணை உண்டா? N.ஆயிஷா மர்யம், தஞ்சாவூர். தெளிவு : இறைவனைத் தவிர மற்ற எல்லா உயிர்களுக்கும் இணைகள்/துணைகள் தேவை. இந்த நியதிக்கேற்ப உலகிலும் சரி, மறு உலகிலும் (சுவர்க்கத்திலும்) சரி, ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவைப்படும். ஆனால் குர்ஆன் மொழிப் பெயர்ப்பாளர்கள் சிலர் கீழ்கண்ட வசனங்களில் “அஸ்வாஜீன்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ள (இணை/துணை) என்பதை /துணைவியர்கள், மனைவியர்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். […]
தலையங்கம் : முஸ்லிம் சமுதாயம் 73 கூட்டமாக பிரியும்! – ஹதீத் விளக்கம்! உண்மையான தேசபக்தி… பிரிவும் பிளவும் : நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உம்மத்(சமூகம்) 73 பிரிவுகளாகப் பிரியும் அவற்றில் ஒரு பிரிவு தவிர மற்றவை நரகத்தில் இருக்கும். நபித்தோழர்கள் கேட்டார்கள் : அந்த (விடுதலை பெற்ற) பிரிவு எது இறைத் தூதரே? நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அவர்கள் என்னையும் என் தோழர்களையும் பின்பற்றுவோர்கள். (அறிவிப்பு : சுனன் அபூதாவூத் 4596, சுனீன் திர்மிதி […]
சமாதி வழிபாட்டினரை விட தவ்ஹீத்வாதிகள் என தங்களை அழைத்துக் கொள்வோரே கொடிய முஷ்ரிக்கள்! அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : 2025 மே மாத தொடர்ச்சி…. உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்ட மதகுருமார்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாகப் போதித்து மக்களை ஏமாற்றி நரகில் தள்ளுவார்கள் என்றே கூறுகிறோம். அதுவும் குர்ஆன் கூறுவதையே எடுத்து வைக்கிறோம். இதற்கு ஆதாரமாக அ.கு.33:66-68, 34:31-33, 37:26-34, 38:55-64, 40:47-49, 41:29, 43:36-45 போன்ற பல குர்ஆன் வசனங்களையே […]
பல்சமயச் சிந்தனை! ஆசிரியர் குழு 2025 மே தொடர்ச்சி… அதனால்தான் இறைவன் இணை வைப்பதற்கு அடுத்த பெருங்குற்றமாக, முன்னோர்களைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பிடுகின்றான். இன்னும் சொல்லப்போனால், இதையும் தனக்கு இணை வைப்பதாகவே குறிப்பிடுகின்றான். “இவர்கள் அல்லாஹ்வை யன்றித் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீகையும், (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும், ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே, இவர்கள்(யாவரும்) ஏவப்பட்டிருக்கின்றனர். அடிபணிவதற்குரிய நாயன், அவனையன்றி வேறெவனும் இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவற்றைவிட்டு அவன் […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2025 மே மாத தொடர்ச்சி… தீஹ் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் நாடோடிகளாக அலைந்தார்கள் : எனது சமுதாயத்தாரே! உங்களுக்கென்றே அல்லாஹ் எழுதிவைத்துள்ள தூய்மையான (பைத்துல் மக்திஸின்) இந்தப் பூமியில் நுழையுங்கள். (அடக்குமுறையாளர்களான அங்குள்ள “அமலேக்கியர்” எனப்படும் எதிரிகளை அஞ்சி) புறமுதுகிட்டு ஓடாதீர்கள். (அவ்வாறு ஓடினால்) நீங்கள் இழப்புக்குள் ளானவர்களாகவே திரும்புவீர்கள் (என்றும் கூறினார்) […]
வாழ்க்கையில் வெற்றி பெற….? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெற ஆசைப்படாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை. எதை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கவேண்டும் என்பதுதான் எல்லோரும் விரும்புவதுமாகும். ஆனால் அந்த வெற்றி என்பது அவ்வளவு சுலபமாக பெரும்பாலோருக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்த உண்மையான வெற்றியும் கூட பல சோதனைகளுக்கு பிறகே கிடைத்ததாகும். மேலும் உலகில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் இளம் வயதில் வெற்றி எனும் கனியை சுவைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். அதுமட்டுமல்ல செல்வந்தர்களாக இருப்பவர்கள் எல்லோரும் வெற்றி […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஹபீபாரம்லா அவர்கள் யாருடைய மகள்? மக்காவில் சக்தி வாய்ந்த காபிர்களின் தலைவன் அபஸுஃப்யான் அவர்களின் மகள். ஆதாரம்: முஹம்மது என்ற நூலில் பக்கம் 577. 2. பார்வை இல்லாமல் இருந்து பார்வை பெற்ற நபி யார்? யாஃகூப் (அலை). 12:93 3. இப்லீஸிடம் மரியாதைக்குரியவர் யார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துபவர். முஸ்லிம்: 5418 4. […]
(மது) போதை! அது அழிவின் பாதை! M. சையத் முபாரக், நாகை இஸ்லாம்தான் உலக மக்களுக்குத் தீங்குகளைத் தருகின்ற போதை, விபச்சாரம் போன்ற அனைத்து தீமைகளையும் வேரோடு கிள்ளி எறியச் செய்கிறது. மேற்கண்ட தீமைகள் மூலம் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற அதிகார வர்க்கத்திற்கு, மாஃபியா கும்பலுக்கு இது பிடிப்பதில்லை. அவர்கள் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும், உள்வாங்கும் மதங்களை அனுசரிக்கும் இவர்கள், இவைகளை முழு மூச்சுடன் எதிர்க்கும் இஸ்லாத்தை விட்டு வைப்பார்களா? அதனால், இஸ்லாத்தை அழிக்க முழு உத்வேகத்துடன் […]
இறைநூல் (குர்ஆன்!) அய்யம்பேட்டை A. நஜ்முதீன் சென்ற இதழில் (மே 2025ல்) குர்ஆனில் மொழிபெயர்ப்பில் உள்ள சில குறைபாட்டிற்கான முக்கியமான காரணம் குர்ஆன் அருளப்பட்ட வரலாற்றை முழுமையாக சில மொழிபெயர்ப்பாளர்கள் அறியாதது, அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல் மொழிப் பெயர்ப்பை (தர்ஜுமாவை) வெளியிட்டது காரணம் என்பதை குறிப்பிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக மொழியைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாமலும் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்புக்கள் வெளியிட்டதாலும் சில குறைபாடுகள் உள்ளன என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். எந்தவொரு நூலையும் வார்த்தைக்கு வார்த்தை நேரிடையாக […]
வருமுன் காப்போம் வளம் பெறுவோம்! (அ) நிம்மதியாக (சந்தோசமாக) வாழ வழி! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் 2025 மே மாத தொடர்ச்சி…. சென்ற மே மாதம் இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததுபோல் ஆரோக்கிய வாழ்விற்கு நடை பயிற்சி “நடப்பதெல்லாம் நன்மைக்கே‘ எவ்வளவு முக்கியம் என்பதை காணலாம். 1. நலம் தரும் நடை எது? 2. எப்போது நடக்கனும்? 3. நடைபயிற்சி எவ்வளவு தூரம்? 4. நடப்பதா? ஓடுவதா? எது நல்லது? 5. நடராஜா – நடராணி 6. பள்ளிக்கு […]
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : 2025 மே மாத தொடர்ச்சி…. கண்மூடித்தனத்திடம் மாட்டிக் கொள்வது சுலபம் விடுபடுவதுதான் கடினத்திலும் கடினம். ஒரு முறை கண்மூடித்தனத்தின் பிடியில் சிக்கிக்கொண்டவர்கள். காலம் கடந்து அதன் கெடுதியை உணர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தவியாய் தவிக் கிறார்கள். சில நேரங்களில் கண்மூடித் தனத்திலிருந்து விடுபட செய்யப்படும் அரிய முயற்சிகளும் தோல்வியைத் தழுவுகின்றன. அதையும் மீறி சிலர் ஒன்றி ரண்டு வியங்களில் கண்மூடித்தனத்திலிருந்து மீள்கின்றனர். […]
யூசுஃப், நபியும் இறைச்சட்டமும்… A. அன்னார், சென்னை. மறு பதிப்பு : இஸ்லாமிய ஆட்சிக்குப்படாத ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் நாட்டு ஆட்சியாளருககு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மேலும் அந்நாட்டின் சட்டங்களை செயல்படுத்துவதோடு ஆட்சியில் (எவ்வகை ஆட்சியாயினும்) பங்கு பெறலாம். அதற்கு முன்னுதாரணமாக யூசுஃப்(அலை) விளங்கினார்கள் என்பதாக நவீன கால தவ்ஹீத் பேச்சாளர் ஒருவர் பேசி வருகிறார். அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றவேண்டும் என்பதாக வலியுறுத்தும் வசனங்களை அதற்கான ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது செயல்படுத்த வேண்டியதை என்றும் […]
மீலாது ஓர் வரலாற்று ஆய்வு! எஸ். ஹலரத் அலி, திருச்சி. மீலாது அல்லது மவ்லிது (நபி முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்) என்பது இஸ்லாமிய உலகில் பல நூற்றாண்டுகளாக பல பிராந்தியங்களில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய நிகழ்வாகும். சுன்னத் வல் ஜமாத் முஸ்லிம்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையின் வரலாறு, தோற்றம், பரிணாமம் மற்றும் பல்வேறு பண்பாட்டு வெளிப்பாடுகளை விரிவாகப் பார்ப்போம். 1. மீலாது கொண்டாட்டத்தின் தோற்றம் மீலாது கொண்டாட்டம் நபி(ஸல்) அவர்களின் […]