அபூஅஸீம்,  இலங்கை சோதனைகளின்போதுபொறுமைகொள்ளல்வேண்டும் : இறை நம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; சோதனைகளின்போது, இன்னல்களை) சகித்து(ப் பொறுத்து)க் கொள்ளுங்கள்; (எதிரிகளுக்காக உங்களுக்கிடையில் ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:200) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நபியாக அறிமுகமாகி அழைப்புப் பணியை ஆரம்பித்த ஆரம்பக்காலகட்டத்திலிருந்தே எதிர்ப்பலைகள் எழ ஆரம்பித்தன. பரிகசித்தல், இழிவுபடுத்துதல், பொய்ப்பித்தல், எள்ளி நகையாடுதல், என இதுபோன்ற இழிசெயல்களால் குறைஷியர்கள் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினார்கள், அற்பமான வசைச் சொற்களால் […]

அறிந்துகொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. மனிதன் வளரும்போது ஏற்படும் ஆசைகள் எத்தனை?1. பொருளாசை, 2. நீண்டநாள் வாழ வேண்டும்.     புகாரி : 6421 2. யார் பூமியில் புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்பவர் யார் என அல்லாஹ் கூறுகிறான்?அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்.     அல்குர்ஆன் 4:100 3. பெண்கள் வி­யத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?நல்லவிதமாக நடத்துங்கள்.     புகாரி:3331 4. பெண்களில் கண்ணியமானவர் என அறியக் கூடிய வழி என்ன என அல்லாஹ் […]

மத்ஹபுகள் முதல் மன்றங்கள் வரை தனி அமைப்புகள் நபிவழியா? கடந்த கால வரலாற்றில் மனித சமுதா யம் வழி தடுமாறிச் செல்லும்போது, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய “நடுநிலைச் சமுதாய”மாகிய முஸ்லிம்களில் பெரும்பாலோர் தமது பணிகளை செய்யத் தவறிய போதெல்லாம், முஸ்லிம்களை தட்டியயழுப்பி குர்ஆனைப் படித்து விளங்கி செயல்படவும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பற்றிப் பிடித்திடவும் நீண்ட நெடுங்காலமாக பல மார்க்க அறிஞர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். தூய இஸ்லாத்தைப் பேணி நடந்து நீதி நெறி ஆட்சி செய்த கலீஃபாக்கள் முதல், […]

அல்லாஹ்கற்றுத்தரும்அழகியபிரார்த்தனைகள்! நூருன்னிஸா அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப் பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப் பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது […]

ஐயமும்!  தெளிவும்!! ஐயம் : பிப்ரவரி 2022 இதழ், பக்கம் 32ல், நபி (ஸல்) அவர்களை இறுதி நபியாக ஏற்க மறுக்கும் “காதியானிகள்’ நபி(ஸல்) அவர்களின் இறுதி உரை முதல் அத்தனை நபி மொழிகளையும் ஏற்க மறுக்கும் “ஹதீத் மறுப்பாளர்கள்’ மேற்படி இருசாராரும் நபி(ஸல்) அவர்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் சிலதை ஏற்கிறார்கள் பலதை மறுக்கிறார்கள். முழுமையாக ஏற்றுக்கொள்ளாத இவர்களை பின்பற்றி தொழுவதை நியாயப்படுத்திட இவர்களை ஹனபியாக்களோடும் ததஜவினரோடும் ஒப்பிட்டு நியாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.  அபூநபீல், தேங்காய்பட்டணம். தெளிவு : நபி(ஸல்) அவர்களை […]

தலையங்கம்! ஃபாஸிஸ்ட்களின் தந்திரம்! அல்லாஹ்வின் மார்க்கத்தை ஊதி அணைக்கும் முயற்சியில் இடைவிடாது இணைந்து உழைக்கும் பல்வேறு உலக மற்றும் அமைப்பு தலைவர்களும், இஸ்லாமியர் மீது மிகுந்த வெறுப்பு கொண்டு அவர்களை இழிவுபடுத்தி அழித்தொழிக்க நினைக்கும் அவர்களின் தொண்டர்களான கைக்கூலிகளும், மாதர்களுக்கான அநீதிக்கு எதிராகப் போராடும் பெண் விடுதலை கட்சி சமூக ஆர்வலர் சகோதரி சபரிமாலா அவர்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தெரிந்து அவர் மீது அவதூறு பரப்பி அவரை விமர்சனம் செய்வதை நாம் சமூக […]

சாமியார்கள்! K.M.H. அபூ அப்தில்லாஹ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சாமியார்களைப் பற்றிய செய்திகள் பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. துறவறத்தைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும் பெண்களையும், ஆசிரமங்களில், மடங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வசாதாரண நிகழ்ச்சியாக ஆகிவிட்டது. உலக அழிவுக்குச் சமீபத்தில் விபச்சாரம் பெருகும் என்று இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கு இந்தச் சாமி யார்களும் முன்னுதாரணங்களாகத் திகழ்கிறார்கள். சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி, பகல் வேஷமாகி வருகிறது. அறிவில் குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் […]

இறை நம்பிக்கையாளர்களே… இஸ்லாத்திற்கு வாருங்கள்! அப்தில்லாஹ் இப்னு அருணாசலம் அட என்னப்பா நீ, வணங்கத் தகுதியான ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்கக் கூடிய முஸ்லிம்களாகிய இறை நம்பிக்கையாளர்களையா இஸ்லாத்திற்கு அழைக்கிறாய், இஸ்லாம் என்றால் என்னவென்றே அறியாத மக்களை நோக்கி அழைத்தாலும் சரி எனலாம், முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்தே… என் சகோதர சகோதரிகளே! உங்கள் எண்ண ஓட்டத்தை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு, ஏக இறைவனான அல்லாஹ் தன் இறை வேதமாக, மனிதகுல வழிகாட்டியாக, இறுதிநாள் வரை எந்த […]

இணை வைக்கும் முஸ்லிம்கள்! (தொடர் – 2) அபூ ஹனிபா,  புளியங்குடி கடந்த பதிவில் இணை வைப்பு என்றால் என்ன? இணை வைத்தால் என்ன நடக்கும்? என்பதை பார்த்தோம். இன்றைய பதிவில் இணை வைத்த முதல் முஸ்லிம் யார்? என்பதை பார்ப்போம். “இணை வைத்த  முதல் முஸ்லிம்” : ஆதம் நபியை படைப்பதற்கு முன்னால் அல்லாஹ் வானவர்களை படைத்திருந்தான். வானவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட முஸ்லிம்களாகவே இருந்தார்கள். (அல்குர்ஆன் 7:34) ஆதம் நபியின் மூலம் அல்லாஹ் வானவர்களை சோதிக்க […]

புரியாத புதிரா குர்ஆன்? அலி,  கல்லிடைக்குறிச்சி சூப்பர் முஸ்லிம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் முஸ்தபா என்பவர் மிக சமீபத்தில் (நவம்பர் 20ம் தேதிக்குப்பின்) வெளியிட்ட தப்ஸீர் இல்லாமல் குர்ஆன் புரியாதா? என்ற வீடியோவில் ததப்புருல் குர்ஆன் என்ற தப்ஸீதை அறிமுகம் செய்துவிட்டு குர்ஆனை புரிந்து கொள்வதற்கு Arabic Basic அவசியம். அரபி மொழி இலக்கண அறிவு அவசியம். அதே போன்று ததப்புருல் குர்ஆன் தப்ஸீரும் அவசியம் என்கிறார் இது இல்லாமல் அவரவர் தாய் மொழியிலுள்ள […]

நான் அவரை விட மேலானவன் என்ற பெருமை! S.H. அதுர்ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்”. “(படைத்த) அந்த ஒரே இறைவன் உங் களுக்கு அருள் புரியட்டும்”. சொர்க்கத்தில் சிறந்த அறிவாளியாக கருதப்பட்டு வந்த இப்லீஸ், அல்லாஹ்வின் கட்டளைக்கு செவி சாய்க்காத காரணத் தால் அவன் மூலம் வெளிப்பட்டது தான் பெருமை என்ற பண்பு. அதை குர்ஆன் விவரிக்கும்போது; “நிச்சயமாக நாம் உங்களை படைக்க(க் கருதி) உங்களை (அதாவது உங்கள் முதல் தந்தையாகிய […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர்,   இலங்கை. ஜனவரி 2022 தொடர்ச்சி… “அல்லாஹ்தான் அனைத்துப் பொருட் களையும் படைத்தவன் (அவற்றுக்குப் பெயரிட்டவன்) ஆவான்” அல்லாஹ்(தான்) அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் (அவற்றுக்குப் பெயரிட்டவன்) ஆவான். அவனே அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளனும் ஆவான். (39:62) என்று சொல்லி விட்டு, வானங்கள் மற்றும் பூமியின் (அனைத்துக் கருவூலங்களின்) திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. (39:63) என்று சொல்கின்றான். மேலும் (அவற்றின்) அனைத்துப் பெயர்களையும் (இறைவன் மனிதர்களின் மூல பிதாவான) ஆதமுக்குக் கற்றுக்கொடுத்தான் (2:102) என்று […]

படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் குர்ஆனை! ஷரஹ் அலி, உடன்குடி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்! (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். அந்த ஒரே இறைவனின் பெயரால்… பொறுமை இறையச்சம் நன்னடத்தை இவற்றை கடைபிடித்தலே நன்மையை தேடி தரும் செயல்கள். (முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும், உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் இறைநூல் அருளப் பட்டவர்களிடம் இருந்தும், இணை வைப்போரிடம் இருந்தும் அதிகமான வேதனை தரும் பல […]

இறைவனிடம் மீளுவோம்! இப்னு சித்தீக்,  கடையநல்லூர். இயற்கைச் சீற்றங்களான புயல், சூறா வளி, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்றவற்றின் உருவாக்கத்தை மனிதர்களாகிய நாம் முன்கூட்டியே உணர முடிந்தாலும், அதனைத் தடுப்பதற்கு சக்தியற்றவர்களாக நாமும் இன்றைய வளர்ச்சியடைந்த தொழில் நுட்பங்களும் இருந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சோதனைகளும், வேதனையான நிகழ்வுகளும் ஏன் பாகுபாடின்றி அனைவரையும் பாதிக்கிறது? இது ஏன் நல்லோரையும், பாமரரையும், அப்பாவிகளையும் விதிவிலக்காய் விடுவதில்லை என்பதைப் பற்றி அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள். “நீங்கள் வேதனைக்குப் பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ,  குண்டூர் இப்றாஹிம்(அலை) அவர்கள் இஸ்மாயில் (அலை) அவர்களை என்ன செய்வதாக கனவு கண்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? அறுத்து பலியிடுவதாக. அல்குர்ஆன் 37:102 மார்க்கத்தில் இல்லாத புதிய வி­யங்களை உருவாக்கியவனை அல்லாஹ் என்ன செய் வதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? சபிப்பதாக. முஸ்லிம் 4002 யூனுஸ் நபி அவர்கள் மீது நிழல் தர எந்த கொடியை முளைக்கச் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான்? சுரைக்கொடி. அல்குர்ஆன் 37:146 சுலைமான் நபி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட […]

உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! (ஸலாம்) உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86) மாற்று மதத்தார்கள் நமக்கு ஸலாம் சொல்லும்போது அதற்குப் பதிலாக இந்த வசனத்தின் பிரகாரம் வ அலைக்கு முஸ்ஸலாம் என்றோ அல்லது வரஹ்மத்துல் லாஹி வ பரக்கத்துஹு என்று கூடுதலாகவோ கூறலாம், அல்லது அப்படியே அதைத் […]

 ஈமான் கொண்டவர்களே! ஈமான் கொள்ளுங்கள்!!  முஹம்மத் ரஃபி நாம் பாலர் பாட இஸ்லாமிய கல்வியில் ஈமான் என்றால் என்ன? என்ற வினா தொடுத்து சொல்லித்தரப்பட்ட “ஈமான்’ பற்றிய பாடத்தில் அதற்கு விடையாக, அல்லாஹ்வை நம்புவது, 2.   அவனது மலக்குமார்களை நம்புவது, 3.   அவனது இறைநெறி நூல்களை நம்புவது, 4.   அவனது தூதர்களை நம்புவது, 5.   இறுதி நாளை நம்புவது, 6.   விதியை நன்மை, தீமை பற்றி நம்புவது என்ற ஆறு அம்சங்களையும் படித்து பசுமரத்து ஆணி போல் […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : நாமெல்லாம் ஐந்து வேளை தொழுகிறோம் சரிதான். ஆனால் எங்கள் ஊரில் சிலர் ஐந்து வேளை தொழுங்கள் என்று குர்ஆனில் சொல்லப்படவில்லையே! ஏன்? என்று கேட்கிறார்கள். நானும் குர்ஆனில் விளக்கங்களை எல்லாம் தேடிப் பார்த்தும் கூட ஐந்து வேளை தொழுகுங்கள் என்று சொல்லக் கூடிய சொல் இல்லை. விளக்கம் தாருங்கள்!   A.K.M.B. செங்கை. தெளிவு : ஜகாத் 2டி சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. தினசரி ஐவேளை தொழவேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. ஏன்? […]

தலையங்கம்! கேரளா தரும் படிப்பினை! அகில இந்திய அளவில் முஸ்லிம்களின் மனம் கவராத இ.யூ.மு.லீக் கேரளாவில் மட்டும் கொடி கட்டிப் பறக்கின்றது. என்ன காரணம்? என்று சிறிது ஆராய்வோம். தமிழ கத்திலும் கேரளாவைப் போல் இ.யூ.மு.லீக் கொடி கட்டிப் பறந்திருக்கும். ஆனால் இங்குள்ள தாய்ச் சபைக்காரர்கள் 1986களில் இஸ்லாமிய மார்க்க விழிப்புணர்வு ஏற்பட்ட நேரத்தில் கட்சிப் பணியை விட்டுவிட்டு தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களில் அதோ வருகிறான் நஜாத்காரன், இதோ இவன் தொப்பி இல்லாமல் தொழுகிறான், விடாதே பிடி […]

இணை வைக்கும் முஸ்லிம்கள்! அபூ ஹனிபா, புளியங்குடி இணை வைக்கும் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு மனம் வருத்தப்பட்டாலும் உண்மையை சொல் லித்தான் ஆகவேண்டும். ஏன் என்றால் இன்றைக்கு ஏதோ சில முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அல்லது மாற்று மத சகோதர, சகோதரிகள் இணைவைக்கும் செயல்களில் ஈடுபட்டு அதைப் பற்றி எச்சரிக்கை செய்யாமல், கண்டும் காணாமல் போனால், நாளை நமது சந்ததிகளும் இணைவைக்கும் செயல் களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் கொடுக்க முடியும்? இன்றைக்கு பக்கத்து […]