வேதங்களில் இறுதி இறைத்தூதர் பற்றி முன் அறிவிப்புகள்!

in 2015 அக்டோபர்

இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் “”கல்கி அவதாரம்” குறித்து அவர் பூமியில் குழப்பங்களும், கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார் எனவும் நம்பப்படுகிறது. இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை. ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார். யார் அவர்? ஓர் ஆய்வுப் பார்வை, எப்போது வருவார் கல்கி அவதார்? ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும் கடைசி அவதாரமான கல்கி, இறைத் தூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதா வார். இதை நான் சொல்லவில்லை. சமீபத்தில் ஹிந்து மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல.

இதை ஓர் இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்ப தோடு, அந்தப் புத்தகத்தையும் தடை செய்தி ருப்பார்கள். ஆனால், கல்கி அவதாரத்தைப் பற் றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “”பிரபஞ்ச இறைத் தூதின் வழிகாட்டி” என்னும் இந்தப் புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளி வந்ததா கும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ் கிருத பண்டிட்டாவார். பண்டிட் வைத் ப்ரகாஷ் பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற் றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்த கத்தை இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்து ணர்ந்து, பலமான ஆதாரங்களினால் இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைசிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். அதனால், ஹிந்துக்கள், இனியும் கல்வி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதி வரை இறைப் பணியாற்றிய இறைவனின் கடைசித் தூதரை ஏற்று இஸ்லாத் தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன் வைக்கிறார்.

1. வேதங்கள், கல்வி அவதாரம் தான் பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது கடைசித் தூதர், முஹம்மதுடைய வி­ஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

2. ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ஜஸீரத் துல் அரப் என்று சொல்லக்கூடிய கடலால் சூழப் பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3. ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத் தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக் கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறை வன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த் தம். ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறைத் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது உறுதிப்படுகிறது.

4. அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப் பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள் ளது. ஆக, இது முஹம்மதின் வி­யத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

5. கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின் றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறை´ குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய வி­ யத்தில் சரியாகிறது.

6. கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக் கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹிரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர்தான்.

7. மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென் றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “மிஃராஜ்’ இரவில் “புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8. அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவ னின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு பத்ரு போர்க்களத்தில் இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல் லோருக்கும் தெரிந்த வி­யம் தான்.

9. மேலும் சில வி­யங்களை வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, கல்கி அவதாரம். குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது அதிமுக்கியமான, கவனத்தில் கொள்ளத்தக்க வி­யமாகும்.

அதாவது, குதிரை வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய்விட்டது. தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக் கிகள், பீரங்கிகள், ஏவுகணைகள் என போர் முறை முற்றிலும் மாறிவிட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்த மற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் கல்வி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதே யன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

My Dear Hindu Friends!! Must Read & Share முஹம்மத் நபியைப் பற்றி இந்து வேதங்கள் பல முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளது. அதில் பிர தானமாக நர­ங்கஷா என்பவர் வருவார் என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நர­ங்கஷா என்ற சமஸ்கிரத வார்த் தைக்கு “”புகழுக்கு உரியவர்” என்று பொருள். முஹம்மத் என்ற வார்த்தைக்கும் புகழுக்கு உரியவர் என்றே பொருள்படும். இதில் இருந்து நர­ங்கஷா என்பவர் முஹம்மத் நபியவர்களாவர் என்று அறிய முடிகிறது. நர­ங்கஷா பற்றி பின்வரும் சில வேதவரிகளிலும் குறிப் பிடப்பட்டுள்ளது.

ரிக்வேதம் : புத்தகம் :1, வேதவரி:13 மந்திரம்:3 ரிகவேதம் : புத்தகம் :1, வேதவரி :18 மந்திரம் : 9 ரிக்வேதம் : புத்தகம்:1 வேதவரி : 106 மந்திரம், 4 ரிக் வேதம் : புத்தகம் : 1, வேதவரி : 142 மந்திரம், 3: ரிக்வேதம் : புத்தகம் : 2, வேதவரி :3 மந்திரம் : 2, ரிக் வேதம், புத்தகம் : 5 வேதவரி : 5 மந்திரம் : 2 ரிக்வேதம்: புத்தகம் : 7, வேதவரி : 2 மந்திரம் :2 ரிக் வேதம் : புத்தகம் 10, வேதவரி: 64 மந்திரம் :3 ரிக் வேதம், புத்தகம் : 10, வேதவரி : 182 மந்திரம் :2, யஜுர் வேதம் : அத்தியாயம் : 21 வசனம் : 31 யஜுர் வேதம் : அத்தியாயம் : 21, வசனம் : 55 யஜுர் வேதம்: அத்தியாயம் : 20 வசனம் : 37 யஜுர் வேதம், அத்தியாயம் : 20, வசனம் : 57, யஜுர் வேதம் : அத்தி யாயம் : 28, வசனம் :2 யஜுர் வேதம் : அத்தியாயம் :28 வசனம் : 19, யஜுர் வேதம் : அத்தியாயம் : 28, வசனம் :42 இன்னும் நர­ங்கஷா ஒட்டகத்தில் பயணிப்பார் என்று அதர்வன வேதம் புத்தகம் 20, வேதவரி : 127இல் சொல்லப்பட்டு உள்ளது.

முஹம்மத் (நர­ங்கஷா) நபிகளார்தான் ஒட்டகத்தில் பயணிப்பவராக இருந்தார். எந்த ஒரு இந்தியரி´யும் ஒட்டகத்தில் பயணிக்கவில்லை. ஏன் என்றால் மனுதர்மம் அத்தியாயம் 11 வசனம் 202 ஒரு பிராமணன் கழுதையிலோ, ஒட்டகத்திலோ பயணிக்கக் கூடாது என்கிறது அதர்வன வேதம் புத்தகம் 20 வேதவரி 24ல் புகழுக்கு உரியவர் எதிரிகளை சண்டை இடாமல் வீழ்த்துவார் என்று சொல்லப்பட்டு உள்ளது. முஹம்மத் நபிகளார் மக்கா வெற்றியின் போது எதிரிகளை சண்டையே போடாது வீழ்த் தினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சாம வேதம் உத்தர்சிக் மந்திரம் 1,500இல் அஹ்மதிற்கு நிரந்தர சட்டம் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. நிரந்தர சட்டம் என்பது குர்ஆனின் ­ஷரியா சட்டமாகும். இதுவே இறுதியான சட்டம். அந்தச் சட்டத்தை மாற்ற வேறு சட்டங்கள் வராது. அஹ்மத் என் பது நபிகளாரின் இன்னொரு பெயர் ஆகும்.

இங்கு அஹ்மத் என்று ஒன்றும் இல்லை. ஆனால் “அக்மடி’ என்றால் “என்னுடைய தந்தை’ என்று பொருள்படும். மொழிபெயர்ப் பாளர்கள் “”அஹ்மத்” என்ற வசனத்தையும் “”என் னுடைய தந்தை” என்று மொழிபெயர்த்துள்ள னர். “”அஹ்மத்” என்கிற வசனம் பின்வரும் இடங்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாம வேதம், இந்ரா, அத்தியாயம் 2, வசனம் 152, யஜுர் வேதம் : அத்தியாயம் : 31, வசனம் : 18, ரிக்வேதம், புத்தகம் : 8, வேதவரி : 6, மந்திரம் : 10, அதர்வன வேதம் : புத்தகம்:8, வேதவரி : 5, மந்திரம் : 16, அதர்வன வேதம் : புத்தகம் : 20, வேதவரி : 126.

Previous post:

Next post: