அறிந்து கொள்வோம்!

in 2019 மார்ச்

மர்யம்பீ, குண்டூர்,

  1. ஈமானின் அம்சங்கள் எத்தனை?
    1. அல்லாஹ்வை நம்புவது,
    2. மலக்குகளை நம்புவது
    3. வேதங்களை நம்புவது (இது வேத கட்டளைகளை செவியேற்று, கட்டுப்பட்டு மன்னிப்பு கேட்டு இறைவனிடமே மீள வேண்டும் என்று நம்புவது)
    4. ரசூல்மார்களை நம்புவது,(அவர்களுக்கிடையே வேற்றுமை காணக்கூடாது என நம்புவது) 2:285
  2. மனநிம்மதி அடைய எந்த மூன்றை நம்ப வேண்டும்?
    அல்லாஹ்வை நம்புவது, மறுமையை நம்புவது, விதியை நம்புவது.
  3. மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்?
    உலகில் உள்ளவர்களுக்காக தஸ்பீஹ் செய்து மன்னிப்பு தேடுகின்றனர். 42:5
  4. உம்முல்குரா என்றால் என்ன?
    நகரங்களின் தாயாகிய மக்காவே உம்முல்குரா ஆகும். 42:7
  5. யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்?
    அநியாயக்காரர்களுக்கு. 42:8
  6. வானங்களுடையவும், பூமியுடையவும் சாவிகள் யாரிடம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
    தன்னிடமே இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். 42:12
  7. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுவதாக கூறுகிறான்?
    தன்னிடம் மீளுவோரை நேர்வழி காட்டுகிறான். 42:13
  8. அல்லாஹ் விரும்பினால் என்ன செய்வதாக கூறுகிறான்?
    காற்றை (வீசாமல்) நிறுத்தி விடுகிறான். 42:33
  9. பெண்களை விவாகரத்து செய்வதாக இருந்தால் எந்த காலத்தில் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்?
    மாதவிடாய் இல்லாத காலத்தில். 65:1
  10. கர்ப்பினிகளுக்கு இத்தா காலம் எதுவரை?
    குழந்தையை பிரசவிக்கும் வரை. 65:4
  11. வானங்களை எவ்வாறு படைத்துள்ளான்?
    ஏழு வானங்களை தட்டுதட்டாக படைத்துள்ளான். 71:15
  12. சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சிம்மாசனத்தை கொண்டு வருவதாக கூறிய ஜின்னின் பெயர் என்ன?
    இப்ரீத் என்ற ஜின். 27:39
  13. ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமானிடம் (அலை) கூறியது?
    ஸபஃ 27:22
  14. பயபக்தியாளர்கள் கோபம் வந்தால் என்ன செய்வார்கள்?
    கோபத்தை மென்று அவர்களை மன்னிப்பார்கள்.
  15. நபி(ஸல்) அவர்களை நோவினை செய்பவர்கள் அல்லாஹ் எவ்வாறு எச்சரிக்கிறான்?
    அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என அல்லாஹ் கூறுகிறான். 9:61
  16. நபி(ஸல்) அவர்களைப் பற்றி அத்தியாயம் 9:128ல் அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    நம்பிக்கையாளருடன் கருணையும் இரக்கமும் உடையவர் என கூறுகிறான்.
  17. நபி(ஸல்) அவர்களை எந்த நிலையில் அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்?
    அகிலத்தாருக்கும் அருட்கொடையாக அனுப்பியதாக கூறுகிறான். 21:107
  18. நயவஞ்சகர்கள் எவ்வகை உதாரணத்தை உடையவர்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
    ஷைத்தானின் உதாரணத்தைப் போன்றவர்கள் என அல்லாஹ் கூறுகிறான். 59:16
  19. பொறுமையாளர்களுக்கு கூலி எவ்வாறு வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான்?
    இரு தடவை வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான். 28:54
  20. நபி(ஸல்) அவர்களின் பொறுப்பு பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்?
    எடுத்துரைப்பதே இத்தூதர் மீதுள்ள பொறுப்பாகும். அல்குர்ஆன் : 5:99

Previous post:

Next post: