ஆலிம் எனத் தனிப்பிரிவு இஸ்லாத்தில் உண்டா?

in 2012 ஜனவரி

அபூ அப்தில்லாஹ்

ஹி.400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “”தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “”ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம்(1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கின்றனர்.

ஆனால் நடுநிலையுடன் இவ்வசனங்களின் கருத்தைப் படித்துச் சிந்திப்பவர்கள் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்கத்தைக் கற்று உயர்வடைய வேண்டும்; இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றி அடைய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகின்றனவே அல்லாமல், சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறுபோட அனு மதிக்கவில்லை என்பதை எளிதாக விளங்க முடிகிறது.

“”சுவர்க்கவாசிகளும், நரகவாசிகளும் சமமாவார்களா?” என்ற 59:20 குர்ஆன் வசனத்தைக் காட்டி இவ்வுலகிலேயே முஸ்லிம்களை சுவர்க்கவாசி, நரகவாசி என இரு பிரிவினராகப் பிரிப்பது எப்படிப்பட்ட கொடூர குற்றமோ அதே போல் மேற்படி வசனங்களைக் காட்டி முஸ்லிம்களை ஆலிம்-அவாம் எனப் பிரிப்பதும் மிகக் கொடூர கொடிய குற்றம் என்பதை விளங்க முடியாதவர்கள் ஆலிம்களா? ஜாஹில்களா?

இந்த மவ்லவிகள் இவ்வசனங்கள் சமுதாயத்தில் ஆலிம் என தனிப்பிரிவுக்கு அனுமதி கொடுக்கிறது என்று கூறுவது உண்மையானால் அதை முதலில் ஏற்படுத்திக் காட்ட கடமைப்பட்டவர் யார்? 2:213, 16:44, 64 குர்ஆன் வசனங்கள் படி இறுதித் தூதர் அவர்கள் அப்படியொரு ஆலிம் பிரிவை ஏற்படுத்தி வழிகாட்டி இருக்க வேண்டுமே! காட்டினார்களா? இல்லையே!

குறைந்தபட்சம் அடுகிடை படுகிடை என நபியின் பள்ளிக்கு அருகில் இருந்த திண்ணையில் பட்டினியாகக் கிடந்து மார்க்கம் கற்றவர்களான “”அஸ்ஹாஃபுஸ் ஸுஃப்பாக்கள்” என அழைக்கப் பட்ட திண்ணைத் தோழர்களுக்கு “”ஆலிம்” என்ற பட்டத்தைக் கொடுத்து, இவர்களே மார்க்கத்தை முறையாகக் கற்றவர்கள்; பட்டம் பெற்றவர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள், மற்றவர்கள் மார்க்கம் பற்றி அவர்களிடம் கேட்டு அவர்களின் வழி காட்டல்படியே நடக்கவேண்டும் என வழி காட்டி இருக்கிறார்களா? அப்படியயாரு ஆதா ரம் இந்த மவ்லவிகளிடம் இருக்கிறதா? நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு வழி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? பித்அத்தா? சொல்லுங்கள்!

21:92, 23:52 குர்ஆன் வசனங்கள் ஒன்று பட்ட ஒரே சமுதாயம் என்று வலியுறுத்திச் சொல்வதற்கு மாறாக சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறு போடுவது 2:39 குர்ஆன் வசனப்படி இறை நிராகரிப்பா? இல்லையா? இறை நிராகரிப்புத்தான் என்பதை 23:53,54,55, 56 குர்ஆன் வசனங்கள் கூறும் கடும் எச்சரிக்கையை உணர முடியாத அறிவிலிகளா இந்த மவ்லவிகள்?

எவரொருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடி விட்டானோ அவரை, மார்க்கத்தில் அறிவாளியாக ஆக்கி விடுகிறான் என்று புகாரியில் காணப்படும் ஹதீசும், மனிதர்களே! கல்வி என்பது கற்பது கொண்டுதான் உண்டாகும்; விளக்கம் என்பது தேடி விளங்கினாலே கிடைக்கும் என்று தப்ரானியில் காணப்படும் ஹதீஸும் மனிதர்கள் என்ற ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய அறிவுரையா? அல்லது வசதியற்ற ஏழை வீட்டு பிள்ளைகளுக்கும் உலகக் கல்வி ஏறாத மக்கு மாணவர்க ளுக்கும் மட்டுமே உரிய அறிவுரையா? மவ்லவிகளே சொல்லுங்கள்!

இறுதித் தூதருக்கு முன்னால் வந்த அனைத்து நபிமார்களின் சமுதாயங்களிலும் இந்த இடைத் தரகர்களான மதகுருமார்கள் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு, குருகுல கல்வியை நடைமுறைப்படுத்தி வந்தது நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? ஏன்? மக்காவிலேயே கஃபத்துல்லாஹ்வுக்கு அருகிலேயே நபியின் ஆறு தலைமுறை முப்பாட்டனார் சூசை கி.பி.440-ல் உருவாக்கிய தாருந்நத்வா குருகுல கல்வி மடமான மதரஸா இருக்கத்தானே செய்தது. நபி(ஸல்) அதை ஏன் இடித்துத் தரைமட்டமாக்கி அதன் ஆலிம்களை ஜாஹில் என முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டினார்கள்?

சரி! மதரஸா நடத்தி மவ்லவி-ஆலிம் பட்டம் கொடுக்கிறீர்கள். அங்கு மார்க்க ஆதாரங்களான குர்ஆன், ஹதீஸை மட்டும் போதிக்கிறீர்களா? ஹிஜ்ரி 400க்குப் பிறகு மனிதர்களால் கற்பனை செய்யப்பட்டவற்றை இஜ்மா, கியாஸ் என்றும், லாஜிக், பாலிஸி என்றும் போதிக்கிறீர்களா? நீங்கள் முறையாக குர்ஆன், ஹதீஸை கற்றுக் கொடுத்தால் குர்ஆனின் பல வசனங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கும் நபிமார்கள் செய்த கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது, தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிடுவதே மிகவும் ஹலாலான செயல் என்பதைப் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு அற்ப கிரயமான கூலி-சம்பளத் திற்கு மார்க்கப்பணி புரிவார்களா?
(பார்க்க 2:78,79, 3:187, 9:9,10,34)

கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் பெற குர்ஆனிலும், ஹதீஸிலும் அறவே ஆதாரம் இல்லை என்று ஆனவுடன், மற்ற மதங்களிலுள்ள மதகுருமார்கள் அவர்களின் மதங்களை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பது போல் முஸ்லிம் மதகுருமார்களாகிய நாங்களும் மதத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறோம் என வாதிடுகிறீர்களே! மற்ற மதங்களின் மதகுருமார்கள் அவர்களுக்காக அனுப்பப்பட்ட நபிமார்கள் இற வனிடமிருந்து வஹீ மூலம் பெற்ற நேர்வழியை கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவது போல், முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவி களும் அல்லாஹ் இறுதித் தூதருக்கு வஹீ மூலம் கொடுத்தருளிய நேர்வழியை கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி மக்களை நரகில் தள்ளுவது கொண்டு அற்ப உலக ஆதாயங்களை அடைய மார்க்கத்தை வயிற்றுப் பிழைப் பாகக் கொண்டிருக்கிறீர்களா? சொல்லுங்கள்!

இறுதியாக நீங்கள் வைக்கும் கவர்ச்சியான, வார்த்தை ஜாலமான வாதம்-வார்த்தை ஜாலம் (6:112) என்ன தெரியுமா? உலகியல் துறைகளான மருத்துவம், பொறியியல், அறிவியல், வழக்குரைஞர், கணக்காளர் போன்ற அனைத்துத் துறைகளுக்கும், அனைத்து வகை கல்விகளுக்கும் அவற்றைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்-குரு-இருப்பது போல் மார்க்கத் துறைக்கும் குரு இருப்பது அவசியம் என்ற வாதத்தை வைக்கிறீர்கள்.

உலகிலுள்ள அனைத்துத் துறைகளிலும் படித்துப் பட்டம் பெற்று அவற்றைப் பிழைப் பாகக் கொண்டிருக்கும் அனைத்து வகை அறிஞர்களும், அறிவு ஜீவிகளும், விஞ்ஞானிகளும் உங்களின் இந்த வாதத்தைச் சரிகண்டு ஏற்கின்றனர். முஸ்லிம்களிலுள்ள இந்த அனைத்துத் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றுப் பேரறிஞர்களாகி, உலகில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்பவர்களும் உங்களின் இந்த மயக்கும் பேச்சில் மயங்கி, மார்க்க விஷயத்தில் உங்களின் தீர்ப்பே இறுதியானது, உறுதியானது என நம்பிச் செயல்படுகின்றனர். நேரடி குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாக மவ்லவிகளாகிய உங்களின் தீர்ப்பு இருந்தாலும், நீங்கள் மவ்லவிகள்-ஆலிம்கள் மார்க்கத்தில் படித்துப் பட்டங்கள் பல பெற்ற பேரறிஞர்கள்; எனவே நீங்கள் சொல்வதுதான் சரி! நேர்வழி என நம்பி மோசம் போகிறார்கள்; வழிகேட்டில் செல்கிறார்கள்.

அல்குர்ஆன் 7:3, 33:36,66,67,68, 18:102, 103, 104, 105,106 இறைவாக்குகள் நேரடியாகக் கூறும் எச்சரிக்கையை இந்த உலகியல் அறிஞர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. இறைவனின் நேரடி வாக்கான இந்த வசனங்கள் கூறுவதை விட, அவற்றிற்கு இந்த மவ்லவிகள் சொல்லும் சுய விளக்கங்களே மிகமிகச் சரி என நம்பி ஏமாறுகின்றனர். 2:159,160,161,162 கூறுவது போல் அல்லாஹ் தெளிவாகச் சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நேரடியாகச் சொல்லி இருப்பதை இந்த மவ்லவிகள் தங்களின் சுய அற்ப உலக ஆதாயத்திற்காகத் திரித்து வளைத்து, மறைத்து நேர்வழியைக் கோணல் வழியாக ஆக்கி மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள் என்ற உண்மையை உணரத் தயாரில்லை. இந்த உண்மையை 33:36,66,67,68 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் சம்மட்டி அடியாகக் கூறுவதை இந்த உலகியல் மேதாவிகள் உணர்வதாக இல்லை.

இப்போது உலகியல் கல்விகளுக்கும் மார்க் கக் கல்விக்குமிடையேயுள்ள மலைக்கும் மடுவுக்குமிடயேயுள்ள பெருத்த வேறுபாடு போல் காணப்படும் வேறுபாடுகளை அடுக் கடுக்காகப் பார்ப்போம்.

உலகியல் கல்விகளில் எந்தத் துறைக் கல்வி யாக இருந்தாலும் அதனை ஆதத்தின் சந்ததிகள் நூற்றுக்கு நூறு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. அவர்களில் 5 சதவிகிதத்தினர் கற்றுக்கொண்டால் எஞ்சி யுள்ள 95 சதவிகிதத்தினரின் அத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தீர்த்து வைக்க முடியும். உதாரணமாக 5 சதவிகிதத்தினர் மருத்துவத் துறையில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் எஞ்சியுள்ள 95 சதவிகிதத்தினரின் நோய்களைத் தீர்க்க முடியும். இப்படி பொறிஞர், வழக்குரை ஞர், நீதிபதிகள், ஆடிட்டர், ஆசிரியர் என அனைத்து உலகியல் துறைகளிலும் 5% அறிஞர் கள் 95% பொது மக்களின் விவகாரங்களத் தீர்த்து வைக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக மார்க்கத்தை 5% அல்ல நூற்றுக்கு நூறு அனைத்து மக்களும் கற்கும் கட்டாயம் இருக்கிறது. இதை இந்த மவ்லவிகள் மறுப்பார்களா?

அடுத்து ஒருவர் ஒரு துறையில் படித்துப் பல பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவர் தனது பெயருக்குப் பின்னால் பல பட்டங்களைப் போட்டிருந்தாலும், அவரது அத்துறை சம்பந்தப்பட்ட ஞானத்தை மற்றவர்கள் இவ்வுலகிலேயே சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும். ஒரு மருத்துவரிடம் பல முறை சென்று மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை என்றால் அம்மருத்துவர் தகுதியற்றவர் என்பதை மற்றவர்கள் சொந்த அனுபவத்திலேயே இவ்வுலகிலேயே அறிந்து கொள்ள முடியும். இதுபோல் உலகியல் அனைத்துத் துறைகளிலும் படித்துப் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் உலகில் கண்கூடாக அவரது தகுதியையும் திறமையையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் அதற்கு மாறாக மார்க்கத்தில் ஒரு மவ்லவியின் தகுதியையும், திறமையையும் உண்மை நிலையையும் இவ்வுலகில் சொந்த அனுபவத்தில் ஒருபோதும் எவரும் அறிய முடியாது. ஒரு மவ்லவி படித்துப் பல பட்டங் களைத் தனது பெயருக்குப் பின்னால் போட் டுக்கொண்டு, இறந்து அடக்கம் செய்யப்பட் டுள்ள ஒருவரின் சமாதியில் போய் அவரிடம் கையேந்தி பிரார்த்தித்தால், அவர் நாளை மறுமையில் நம்மை சுவர்க்கம் கொண்டு போய் சேர்த்துவிடுவார் என புருடா விடுகிறார் என்றால், அதை நம்பும் ஒருவர் இவ்வுல கிலேயே தனது சொந்த அனுபவத்தில் அந்த மவ்லவியின் தகுதியை, திறமையை, உண்மை நிலையை அறிய முடியுமா? ஒருபோதும் முடியாது. நாளை மறுமையில் இறைவனின் முன் ஆஜரான பின்னரே அது தெரியவரும்.

உலகியல் கல்விகளில் ஒன்றை ஒருவன் கற்று அதைத் தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத் தலாம். காரணம் அத்துறையில் 5% மட்டுமே கற்றுப் பட்டம் பெற்றிருப்பர். ஆனால் மார்க்கத்தை 100% கற்று, மார்க்கத்தை அறிந்து நடப்பது கட்டாயக் கடமையாக இருப்பதால், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது மக் களை ஏமாற்றிப் பிழைக்கவே வழி வகுக்கும். எஞ்சியுள்ள 95% மார்க்கத்தை அறிந்து கொள்ள விடாமல் தடுக்கவும், மக்களை ஏமாற் றிப் பிழைக்கவுமே அது வழி வகுக்கும்.

உலகியல் துறைகளில் 5% அவற்றில் கற்றுப் பட்டங்கள் பல பெற்று எஞ்சியுள்ள 95% மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றிப் பிழைக் கிறார்கள் என்பதை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். சாதாரண சளி, காய்ச்சலுக் காக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஓரிரு மாத்திரையில் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்தாமல், எத்தனை வகை டெஸ்ட்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்? ஒரு சில மருத்துவர்களுக்கு அப்படி பிரிஸ்கிரிப்சன் எழுதிக் கொடுப்பதில் மட்டுமே அவற்றிற்குரிய கமிஷன் மூலம் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

ஒரு மருத்துவரின் தகுதியையும், திறமை யையும் இவ்வுலகில் சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்ளும் வாய்ப்புள்ள மருத்துவத் துறையிலேயே, முறை தவறி மக்களை ஏமாற்றிச் சம்பாதிக்க முடிகிறது என்றால் ஒரு மவ்லவி யின் தகுதியையும், திறமையையும், உண்மை நிலையையும் இவ்வுலகில் அறிந்து கொள்ள வாய்ப்பு அறவே இல்லாத நிலையில் அவர் எந்த அளவு மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

உலகியல் துறைகளிலாவது 5% மக்கள் அத்துறைகளில் படித்துப் பட்டம் பெற்றால் போதும். எஞ்சியுள்ள 95% மக்களின் அத்துறைகள் பற்றிய விவகாரங்களை தீர்த்து வைக்க முடியும். ஆனால் மார்க்கத்தில் 100% மக்களும் அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது 2:186, 7:3, 33:21, 36, 66,67,68, 18:102-106, 59:7 போன்ற குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்த்தால் குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதே. 100% மக்களும் அறிய வேண்டிய மார்க்கத்தை 95% மக்களைத் தடுத்து வெறும் 5% மவ்லவிகள் மட்டும் கற்று 95% மக்களை ஏமாற்றிப் பிழைப் பதை விடக் கொடுமை உலகில் வேறு இருக்க முடியுமா?

அல்லாஹ் உலக வாழ்க்கைப் பரீட்சை வாழ்க்கை என்று 5:48,94, 6:165, 11:7, 16:92, 27:40, 67:2 போன்ற பல குர்ஆன் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதின் பொருள் என்ன? பரீட்சை என்றால் ஒருவனை ஒருவன் காப்பி அடிக்காமல், ஒவ்வொவருவரும் தன் தனித்திறமை வெளிப்படுத்தும் பொருட்டே, அதன் மூலம் புள்ளிகள் கொடுத்து வெற்றி தோல்வியை அறிந்து வெற்றியாளர்களைத் தனியாகவும், தோல்வியுற்றவர்களைத் தனியாகவும் பிரித்து அறிவதற்கே பரீட்சை என்பதை அறிய முடியாத மூடர்கள் இருக்க முடியுமா? அந்தப் பரீட்சை முடிவை நாளை மறுமையில் அல்லாஹ்வே அறிவிப்பான் என்றும், அந்தத் தீர்ப்பை அல்லாஹ் நாளை மறுமையில் மட்டுமே இறுதித் தீர்ப்பாக அளிப்பதாகவும், தீர்ப்பை மறுமைக்கென்றே ஒத்தி வைத்திருப்பதை 2:113, 10:19.93. 11:110, 16:124, 22:17,56, 27:78, 32:25, 39:3, 69:75, 41:45, 42:14, 21, 45:17 போன்ற பல குர்ஆன் வசனங்களில் கூறி இருப்பதை ஆலிம்கள் என மார்தட்டும் இந்த மவ்லவிகள் அறிய வில்லையா?

ஹிஜ்ரி 400க்குப் பிறகு கற்பனை செய்யப் பட்ட பித்அத்தான இந்தப் புரோகித மதரஸாக் களில் சில காலம் செலவிட்டவர்களை ஆலிம் கள் என்றும், மற்றவர்களை அவாம்கள் என்றும் இவ்வுலகிலேயே மேலே எடுத்து எழுதியுள்ள அத்தனை இறைவாக்குகளையும் நிராகரித்துத் தீர்ப்பு அளிக்கின்றனர் இம்மதகுருமார்கள். 42:21 இறைவாக்கு சொல்வது போல் இந்த மவ்லவிகள் அல்லாஹ்வுக்கு இணையாளர் களாகி கொடும் ´ர்க்கில்-இணை வைப்பில் மூழ்குகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? 49:16 எச்சரிப்பது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்பட்டு மேலும் ´ர்க்கில்-இணை வைப்பின் ஆக அடித்தட்டிற்குப் போகிறார்களா? இல்லையா?
(பார்க்க 4:145)

இதற்கெல்லாம் மேலாக இன்னொரு பேருண்மையை ஆலிம்கள்-அறிஞர்கள் என மார்தட்டும் இந்த மவ்லவிகள் அறியாதிருக்கி றார்களா? அல்லது 2:146, 6:20 குர்ஆன் வசனங் கள் கூறுவது போல் நன்கு அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்களா? அதாவது உலகியல் கல்வி அனைத்தும் இவர் களைப் போன்ற, குர்ஆன் 16:4, 32:7, 35:11, 36:77, 75:37-40, 76:2, 77:20-23, 80:18,19, 86:5-7 96:2 போன்ற பல வசனங்கள் கூறுவது போல் அற்பப் பொருளிலிருந்து படைக்கப்பட்ட மனிதன், வழி கெடுக்கும் மனிதன் (31:6) அக்கிரமம் செய்யும் மனிதன் (42:42) கர்வ முள்ள மனிதன் (90:4-10, 96:6) உலக இன்பங் களில் மூழ்கும் மனிதன் (76:27, 87:16) அவசரக் கார மனிதன் (17:11, 21:37, 70:19) அறியாமை நிறைந்த மனிதன் (33:72) பலஹீனமான மனிதன் (4:28), நன்றி கெட்ட மனிதன் (10:12, 11:9, 17:67, 29:65, 66, 30:33,34, 31:32, 39:49, 100:6) தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளும் மனிதன் (10:44) இவ்வுலகப் பொருட்களை அளவு மீறி நேசிக்கும் மனிதன் (89:20, 100:8) இப்படி எண்ணற்ற குறைபாடுடைய அற்ப அறிவுடைய மனிதன்(17:85) பெரும் ஆய்வு செய்து அவனது அறிவில் பட்டவையே. அவற் றில் பல குறைபாடுகள் இருப்பது இயற்கையே. கால மாறுபாட்டால், அறிவியல் கண்டுபிடிப்பு களால் உலகியல் கல்விகளில் மேலதிக விளக்கம், ஆய்வுகள் அவசியமே. இவர்களைப் போன்ற மனிதர்களே உலகியல் கல்வித் துறைகளில் நூல்கள் இயற்றி அவை பாடமாகக் கற்பிக்கப்படுகின்றன.

எனவே உலகியல் துறைக் கல்வியைக் கற்பிக்க மேலதிக விளக்கம் கொடுக்க ஆசிரியர், குரு அவசியமே. எந்தத் துறையும் இதில் விதி விலக்குப் பெற முடியாது. அதற்கு மாறாக மார்க்கத்தைக் கொடுத்து அதைத் தெள்ளத் தெளிவாக நேரடியாக விளக்கியவன் சர்வ வல்லமை மிக்க, சர்வ ஞானம் உள்ள, அண்ட சராசங்களையும் மனிதனையும் படைத்த ஏக னாகிய இறைவன். மார்க்கம் அவனுக்கு மட் டுமே சொந்தம். அதில் மனிதர்களில் யாரும் தங்கள் மூக்கை நுழைக்க முடியாது.

முக்காலமும் அறிந்த சர்வசக்தனான இறை வன் வடிவமைத்துக் கொடுத்த மார்க்கம் ஆதலால்,அதில் அற்ப அறிவையுடைய மனித னின் மேலதிக ஆய்வோ, விளக்கமோ அணு வளவு கூட இருக்கக் கூடாது. இதைத்தான் அல்லாஹ் 49:16ல் நீங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்க முற்படுகிறீர்களா? எனக் கடிந்து கேட்கிறான். அப்படிப் பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக முற்படுவதாக 42:21ல் கண்டிருக்கிறான்.

ஆம்! உண்மைதானே. அல்லாஹ்வே மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக, விளக்கமாக, சந்தேகத்திற்கிடமின்றி நேரடியாக விளக்கி இருப்பதை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க, அவை அனைத்தையும் நிராகரித்து குஃப்ரிலாகி, மார்க்கத்திற்கு மேல் விளக்கம் கொடுக்கும் பேர்வழிகள் என இந்த மவ்லவிகள் கிளம்பினால் இவர்கள் வரம்பு மீறும் தாஃகூத்கள், மனித ஷைத்தான்கள் என் பதில் சந்தேகமுண்டா? அற்ப உலக ஆதாயங் களைக் குறிக்கோளாகக் கொண்டு ஷைத்தா னின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார் கள் என்பதில் சந்தேகமுண்டா?

உலகியல் துறைகளில் ஆசிரியர்களைக் கொண்டு, குருமார்களைக் கொண்டு கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெற்று பெரும் மேதை களாக, அறிஞர்களாகத் திகழ்வது போல், அவை கொண்டு பிழைப்பு நடத்திப் பணம் ஈட்டுவது போல், மார்க்கத் துறையிலும் ஆசிரியர்களைக் கொண்டு, மத குருமார்களைக் கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மேல் விளக்கம் பெற்றே மார்க்கத்தை விளங்க முடியும். மார்க்கத் துறையிலும் ஆலிம்கள், மவ்லவிகள் என ஒரு தனிப்பிரிவு உண்டு; அவர்கள் அதைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளலாம் எனத் தப்புக் கணக்குப் போடாதீர்கள்.

உங்களின் உலகியல் துறைகளோடு, மார்க்கத்தை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மார்க்கத் துறைக்கும் உலகியல் துறைகளுக்கும் மடுவுக் கும் மலைக்குமுள்ள பெருத்த வேறுபாடு உண்டு. உலகியல் துறைகள் உங்களைப் போன்ற அற்ப அறிவுடைய மனிதர்களின் கண்டுபிடிப்பே. மார்க்கத் துறை அகிலங்களை யும், மனிதனையும் படைத்த முக்காலமும் அறிந்த சர்வ ஞானமிக்க ஏகனான இறைவனின் அருட்கொடை; அதில் அற்ப அறிவுள்ள மனிதன் தன் மூக்கை ஆலிம், அல்லாமா, மவ்லவி, மார்க்க மேதை போன்ற பெயர்களால் நுழைக்க முடியவே முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும்.

ஆலிம் எனத் தனிப்பிரிவு
இஸ்லாத்தில் உண்டா?
அபூ அப்தில்லாஹ்

ஹி.400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “”தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “”ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம்(1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கின்றனர்.

ஆனால் நடுநிலையுடன் இவ்வசனங்களின் கருத்தைப் படித்துச் சிந்திப்பவர்கள் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மார்க்கத்தைக் கற்று உயர்வடைய வேண்டும்; இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றி அடைய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகின்றனவே அல்லாமல், சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறுபோட அனு மதிக்கவில்லை என்பதை எளிதாக விளங்க முடிகிறது.

“”சுவர்க்கவாசிகளும், நரகவாசிகளும் சமமாவார்களா?” என்ற 59:20 குர்ஆன் வசனத்தைக் காட்டி இவ்வுலகிலேயே முஸ்லிம்களை சுவர்க்கவாசி, நரகவாசி என இரு பிரிவினராகப் பிரிப்பது எப்படிப்பட்ட கொடூர குற்றமோ அதே போல் மேற்படி வசனங்களைக் காட்டி முஸ்லிம்களை ஆலிம்-அவாம் எனப் பிரிப்பதும் மிகக் கொடூர கொடிய குற்றம் என்பதை விளங்க முடியாதவர்கள் ஆலிம்களா? ஜாஹில்களா?

இந்த மவ்லவிகள் இவ்வசனங்கள் சமுதாயத்தில் ஆலிம் என தனிப்பிரிவுக்கு அனுமதி கொடுக்கிறது என்று கூறுவது உண்மையானால் அதை முதலில் ஏற்படுத்திக் காட்ட கடமைப்பட்டவர் யார்? 2:213, 16:44, 64 குர்ஆன் வசனங்கள் படி இறுதித் தூதர் அவர்கள் அப்படியொரு ஆலிம் பிரிவை ஏற்படுத்தி வழிகாட்டி இருக்க வேண்டுமே! காட்டினார்களா? இல்லையே!

குறைந்தபட்சம் அடுகிடை படுகிடை என நபியின் பள்ளிக்கு அருகில் இருந்த திண்ணையில் பட்டினியாகக் கிடந்து மார்க்கம் கற்றவர்களான “”அஸ்ஹாஃபுஸ் ஸுஃப்பாக்கள்” என அழைக்கப் பட்ட திண்ணைத் தோழர்களுக்கு “”ஆலிம்” என்ற பட்டத்தைக் கொடுத்து, இவர்களே மார்க்கத்தை முறையாகக் கற்றவர்கள்; பட்டம் பெற்றவர்கள், மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள், மற்றவர்கள் மார்க்கம் பற்றி அவர்களிடம் கேட்டு அவர்களின் வழி காட்டல்படியே நடக்கவேண்டும் என வழி காட்டி இருக்கிறார்களா? அப்படியயாரு ஆதா ரம் இந்த மவ்லவிகளிடம் இருக்கிறதா? நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு வழி மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? பித்அத்தா? சொல்லுங்கள்!

21:92, 23:52 குர்ஆன் வசனங்கள் ஒன்று பட்ட ஒரே சமுதாயம் என்று வலியுறுத்திச் சொல்வதற்கு மாறாக சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறு போடுவது 2:39 குர்ஆன் வசனப்படி இறை நிராகரிப்பா? இல்லையா? இறை நிராகரிப்புத்தான் என்பதை 23:53,54,55, 56 குர்ஆன் வசனங்கள் கூறும் கடும் எச்சரிக்கையை உணர முடியாத அறிவிலிகளா இந்த மவ்லவிகள்?

எவரொருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடி விட்டானோ அவரை, மார்க்கத்தில் அறிவாளியாக ஆக்கி விடுகிறான் என்று புகாரியில் காணப்படும் ஹதீசும், மனிதர்களே! கல்வி என்பது கற்பது கொண்டுதான் உண்டாகும்; விளக்கம் என்பது தேடி விளங்கினாலே கிடைக்கும் என்று தப்ரானியில் காணப்படும் ஹதீஸும் மனிதர்கள் என்ற ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய அறிவுரையா? அல்லது வசதியற்ற ஏழை வீட்டு பிள்ளைகளுக்கும் உலகக் கல்வி ஏறாத மக்கு மாணவர்க ளுக்கும் மட்டுமே உரிய அறிவுரையா? மவ்லவிகளே சொல்லுங்கள்!

இறுதித் தூதருக்கு முன்னால் வந்த அனைத்து நபிமார்களின் சமுதாயங்களிலும் இந்த இடைத் தரகர்களான மதகுருமார்கள் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு, குருகுல கல்வியை நடைமுறைப்படுத்தி வந்தது நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? ஏன்? மக்காவிலேயே கஃபத்துல்லாஹ்வுக்கு அருகிலேயே நபியின் ஆறு தலைமுறை முப்பாட்டனார் சூசை கி.பி.440-ல் உருவாக்கிய தாருந்நத்வா குருகுல கல்வி மடமான மதரஸா இருக்கத்தானே செய்தது. நபி(ஸல்) அதை ஏன் இடித்துத் தரைமட்டமாக்கி அதன் ஆலிம்களை ஜாஹில் என முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டினார்கள்?

சரி! மதரஸா நடத்தி மவ்லவி-ஆலிம் பட்டம் கொடுக்கிறீர்கள். அங்கு மார்க்க ஆதாரங்களான குர்ஆன், ஹதீஸை மட்டும் போதிக்கிறீர்களா? ஹிஜ்ரி 400க்குப் பிறகு மனிதர்களால் கற்பனை செய்யப்பட்டவற்றை இஜ்மா, கியாஸ் என்றும், லாஜிக், பாலிஸி என்றும் போதிக்கிறீர்களா? நீங்கள் முறையாக குர்ஆன், ஹதீஸை கற்றுக் கொடுத்தால் குர்ஆனின் பல வசனங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கும் நபிமார்கள் செய்த கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் அறவே கூடாது, தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிடுவதே மிகவும் ஹலாலான செயல் என்பதைப் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு அற்ப கிரயமான கூலி-சம்பளத் திற்கு மார்க்கப்பணி புரிவார்களா?
(பார்க்க 2:78,79, 3:187, 9:9,10,34)

கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் பெற குர்ஆனிலும், ஹதீஸிலும் அறவே ஆதாரம் இல்லை என்று ஆனவுடன், மற்ற மதங்களிலுள்ள மதகுருமார்கள் அவர்களின் மதங்களை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பது போல் முஸ்லிம் மதகுருமார்களாகிய நாங்களும் மதத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறோம் என வாதிடுகிறீர்களே! மற்ற மதங்களின் மதகுருமார்கள் அவர்களுக்காக அனுப்பப்பட்ட நபிமார்கள் இற வனிடமிருந்து வஹீ மூலம் பெற்ற நேர்வழியை கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுவது போல், முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவி களும் அல்லாஹ் இறுதித் தூதருக்கு வஹீ மூலம் கொடுத்தருளிய நேர்வழியை கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி மக்களை நரகில் தள்ளுவது கொண்டு அற்ப உலக ஆதாயங்களை அடைய மார்க்கத்தை வயிற்றுப் பிழைப் பாகக் கொண்டிருக்கிறீர்களா? சொல்லுங்கள்!

இறுதியாக நீங்கள் வைக்கும் கவர்ச்சியான, வார்த்தை ஜாலமான வாதம்-வார்த்தை ஜாலம் (6:112) என்ன தெரியுமா? உலகியல் துறைகளான மருத்துவம், பொறியியல், அறிவியல், வழக்குரைஞர், கணக்காளர் போன்ற அனைத்துத் துறைகளுக்கும், அனைத்து வகை கல்விகளுக்கும் அவற்றைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்-குரு-இருப்பது போல் மார்க்கத் துறைக்கும் குரு இருப்பது அவசியம் என்ற வாதத்தை வைக்கிறீர்கள்.

உலகிலுள்ள அனைத்துத் துறைகளிலும் படித்துப் பட்டம் பெற்று அவற்றைப் பிழைப் பாகக் கொண்டிருக்கும் அனைத்து வகை அறிஞர்களும், அறிவு ஜீவிகளும், விஞ்ஞானிகளும் உங்களின் இந்த வாதத்தைச் சரிகண்டு ஏற்கின்றனர். முஸ்லிம்களிலுள்ள இந்த அனைத்துத் துறைகளில் படித்துப் பட்டம் பெற்றுப் பேரறிஞர்களாகி, உலகில் வசதி வாய்ப்புகளுடன் வாழ்பவர்களும் உங்களின் இந்த மயக்கும் பேச்சில் மயங்கி, மார்க்க விஷயத்தில் உங்களின் தீர்ப்பே இறுதியானது, உறுதியானது என நம்பிச் செயல்படுகின்றனர். நேரடி குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாக மவ்லவிகளாகிய உங்களின் தீர்ப்பு இருந்தாலும், நீங்கள் மவ்லவிகள்-ஆலிம்கள் மார்க்கத்தில் படித்துப் பட்டங்கள் பல பெற்ற பேரறிஞர்கள்; எனவே நீங்கள் சொல்வதுதான் சரி! நேர்வழி என நம்பி மோசம் போகிறார்கள்; வழிகேட்டில் செல்கிறார்கள்.

அல்குர்ஆன் 7:3, 33:36,66,67,68, 18:102, 103, 104, 105,106 இறைவாக்குகள் நேரடியாகக் கூறும் எச்சரிக்கையை இந்த உலகியல் அறிஞர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. இறைவனின் நேரடி வாக்கான இந்த வசனங்கள் கூறுவதை விட, அவற்றிற்கு இந்த மவ்லவிகள் சொல்லும் சுய விளக்கங்களே மிகமிகச் சரி என நம்பி ஏமாறுகின்றனர். 2:159,160,161,162 கூறுவது போல் அல்லாஹ் தெளிவாகச் சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நேரடியாகச் சொல்லி இருப்பதை இந்த மவ்லவிகள் தங்களின் சுய அற்ப உலக ஆதாயத்திற்காகத் திரித்து வளைத்து, மறைத்து நேர்வழியைக் கோணல் வழியாக ஆக்கி மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள் என்ற உண்மையை உணரத் தயாரில்லை. இந்த உண்மையை 33:36,66,67,68 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் சம்மட்டி அடியாகக் கூறுவதை இந்த உலகியல் மேதாவிகள் உணர்வதாக இல்லை.

இப்போது உலகியல் கல்விகளுக்கும் மார்க் கக் கல்விக்குமிடையேயுள்ள மலைக்கும் மடுவுக்குமிடயேயுள்ள பெருத்த வேறுபாடு போல் காணப்படும் வேறுபாடுகளை அடுக் கடுக்காகப் பார்ப்போம்.

உலகியல் கல்விகளில் எந்தத் துறைக் கல்வி யாக இருந்தாலும் அதனை ஆதத்தின் சந்ததிகள் நூற்றுக்கு நூறு அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. அவர்களில் 5 சதவிகிதத்தினர் கற்றுக்கொண்டால் எஞ்சி யுள்ள 95 சதவிகிதத்தினரின் அத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தீர்த்து வைக்க முடியும். உதாரணமாக 5 சதவிகிதத்தினர் மருத்துவத் துறையில் படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் எஞ்சியுள்ள 95 சதவிகிதத்தினரின் நோய்களைத் தீர்க்க முடியும். இப்படி பொறிஞர், வழக்குரை ஞர், நீதிபதிகள், ஆடிட்டர், ஆசிரியர் என அனைத்து உலகியல் துறைகளிலும் 5% அறிஞர் கள் 95% பொது மக்களின் விவகாரங்களத் தீர்த்து வைக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக மார்க்கத்தை 5% அல்ல நூற்றுக்கு நூறு அனைத்து மக்களும் கற்கும் கட்டாயம் இருக்கிறது. இதை இந்த மவ்லவிகள் மறுப்பார்களா?

அடுத்து ஒருவர் ஒரு துறையில் படித்துப் பல பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவர் தனது பெயருக்குப் பின்னால் பல பட்டங்களைப் போட்டிருந்தாலும், அவரது அத்துறை சம்பந்தப்பட்ட ஞானத்தை மற்றவர்கள் இவ்வுலகிலேயே சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்ள முடியும். ஒரு மருத்துவரிடம் பல முறை சென்று மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை என்றால் அம்மருத்துவர் தகுதியற்றவர் என்பதை மற்றவர்கள் சொந்த அனுபவத்திலேயே இவ்வுலகிலேயே அறிந்து கொள்ள முடியும். இதுபோல் உலகியல் அனைத்துத் துறைகளிலும் படித்துப் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் உலகில் கண்கூடாக அவரது தகுதியையும் திறமையையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் அதற்கு மாறாக மார்க்கத்தில் ஒரு மவ்லவியின் தகுதியையும், திறமையையும் உண்மை நிலையையும் இவ்வுலகில் சொந்த அனுபவத்தில் ஒருபோதும் எவரும் அறிய முடியாது. ஒரு மவ்லவி படித்துப் பல பட்டங் களைத் தனது பெயருக்குப் பின்னால் போட் டுக்கொண்டு, இறந்து அடக்கம் செய்யப்பட் டுள்ள ஒருவரின் சமாதியில் போய் அவரிடம் கையேந்தி பிரார்த்தித்தால், அவர் நாளை மறுமையில் நம்மை சுவர்க்கம் கொண்டு போய் சேர்த்துவிடுவார் என புருடா விடுகிறார் என்றால், அதை நம்பும் ஒருவர் இவ்வுல கிலேயே தனது சொந்த அனுபவத்தில் அந்த மவ்லவியின் தகுதியை, திறமையை, உண்மை நிலையை அறிய முடியுமா? ஒருபோதும் முடியாது. நாளை மறுமையில் இறைவனின் முன் ஆஜரான பின்னரே அது தெரியவரும்.

உலகியல் கல்விகளில் ஒன்றை ஒருவன் கற்று அதைத் தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத் தலாம். காரணம் அத்துறையில் 5% மட்டுமே கற்றுப் பட்டம் பெற்றிருப்பர். ஆனால் மார்க்கத்தை 100% கற்று, மார்க்கத்தை அறிந்து நடப்பது கட்டாயக் கடமையாக இருப்பதால், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது மக் களை ஏமாற்றிப் பிழைக்கவே வழி வகுக்கும். எஞ்சியுள்ள 95% மார்க்கத்தை அறிந்து கொள்ள விடாமல் தடுக்கவும், மக்களை ஏமாற் றிப் பிழைக்கவுமே அது வழி வகுக்கும்.

உலகியல் துறைகளில் 5% அவற்றில் கற்றுப் பட்டங்கள் பல பெற்று எஞ்சியுள்ள 95% மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றிப் பிழைக் கிறார்கள் என்பதை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். சாதாரண சளி, காய்ச்சலுக் காக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஓரிரு மாத்திரையில் குணப்படுத்த வேண்டியதை அப்படிக் குணப்படுத்தாமல், எத்தனை வகை டெஸ்ட்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்? ஒரு சில மருத்துவர்களுக்கு அப்படி பிரிஸ்கிரிப்சன் எழுதிக் கொடுப்பதில் மட்டுமே அவற்றிற்குரிய கமிஷன் மூலம் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

ஒரு மருத்துவரின் தகுதியையும், திறமை யையும் இவ்வுலகில் சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்ளும் வாய்ப்புள்ள மருத்துவத் துறையிலேயே, முறை தவறி மக்களை ஏமாற்றிச் சம்பாதிக்க முடிகிறது என்றால் ஒரு மவ்லவி யின் தகுதியையும், திறமையையும், உண்மை நிலையையும் இவ்வுலகில் அறிந்து கொள்ள வாய்ப்பு அறவே இல்லாத நிலையில் அவர் எந்த அளவு மக்களை ஏமாற்றிப் பணம் பண்ணுவார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

உலகியல் துறைகளிலாவது 5% மக்கள் அத்துறைகளில் படித்துப் பட்டம் பெற்றால் போதும். எஞ்சியுள்ள 95% மக்களின் அத்துறைகள் பற்றிய விவகாரங்களை தீர்த்து வைக்க முடியும். ஆனால் மார்க்கத்தில் 100% மக்களும் அறிந்து அதன்படி நடக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது 2:186, 7:3, 33:21, 36, 66,67,68, 18:102-106, 59:7 போன்ற குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்த்தால் குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதே. 100% மக்களும் அறிய வேண்டிய மார்க்கத்தை 95% மக்களைத் தடுத்து வெறும் 5% மவ்லவிகள் மட்டும் கற்று 95% மக்களை ஏமாற்றிப் பிழைப் பதை விடக் கொடுமை உலகில் வேறு இருக்க முடியுமா?

அல்லாஹ் உலக வாழ்க்கைப் பரீட்சை வாழ்க்கை என்று 5:48,94, 6:165, 11:7, 16:92, 27:40, 67:2 போன்ற பல குர்ஆன் வசனங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதின் பொருள் என்ன? பரீட்சை என்றால் ஒருவனை ஒருவன் காப்பி அடிக்காமல், ஒவ்வொவருவரும் தன் தனித்திறமை வெளிப்படுத்தும் பொருட்டே, அதன் மூலம் புள்ளிகள் கொடுத்து வெற்றி தோல்வியை அறிந்து வெற்றியாளர்களைத் தனியாகவும், தோல்வியுற்றவர்களைத் தனியாகவும் பிரித்து அறிவதற்கே பரீட்சை என்பதை அறிய முடியாத மூடர்கள் இருக்க முடியுமா? அந்தப் பரீட்சை முடிவை நாளை மறுமையில் அல்லாஹ்வே அறிவிப்பான் என்றும், அந்தத் தீர்ப்பை அல்லாஹ் நாளை மறுமையில் மட்டுமே இறுதித் தீர்ப்பாக அளிப்பதாகவும், தீர்ப்பை மறுமைக்கென்றே ஒத்தி வைத்திருப்பதை 2:113, 10:19.93. 11:110, 16:124, 22:17,56, 27:78, 32:25, 39:3, 69:75, 41:45, 42:14, 21, 45:17 போன்ற பல குர்ஆன் வசனங்களில் கூறி இருப்பதை ஆலிம்கள் என மார்தட்டும் இந்த மவ்லவிகள் அறிய வில்லையா?

ஹிஜ்ரி 400க்குப் பிறகு கற்பனை செய்யப் பட்ட பித்அத்தான இந்தப் புரோகித மதரஸாக் களில் சில காலம் செலவிட்டவர்களை ஆலிம் கள் என்றும், மற்றவர்களை அவாம்கள் என்றும் இவ்வுலகிலேயே மேலே எடுத்து எழுதியுள்ள அத்தனை இறைவாக்குகளையும் நிராகரித்துத் தீர்ப்பு அளிக்கின்றனர் இம்மதகுருமார்கள். 42:21 இறைவாக்கு சொல்வது போல் இந்த மவ்லவிகள் அல்லாஹ்வுக்கு இணையாளர் களாகி கொடும் ´ர்க்கில்-இணை வைப்பில் மூழ்குகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? 49:16 எச்சரிப்பது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்பட்டு மேலும் ´ர்க்கில்-இணை வைப்பின் ஆக அடித்தட்டிற்குப் போகிறார்களா? இல்லையா?
(பார்க்க 4:145)

இதற்கெல்லாம் மேலாக இன்னொரு பேருண்மையை ஆலிம்கள்-அறிஞர்கள் என மார்தட்டும் இந்த மவ்லவிகள் அறியாதிருக்கி றார்களா? அல்லது 2:146, 6:20 குர்ஆன் வசனங் கள் கூறுவது போல் நன்கு அறிந்து கொண்டே உண்மையை மறைக்கிறார்களா? அதாவது உலகியல் கல்வி அனைத்தும் இவர் களைப் போன்ற, குர்ஆன் 16:4, 32:7, 35:11, 36:77, 75:37-40, 76:2, 77:20-23, 80:18,19, 86:5-7 96:2 போன்ற பல வசனங்கள் கூறுவது போல் அற்பப் பொருளிலிருந்து படைக்கப்பட்ட மனிதன், வழி கெடுக்கும் மனிதன் (31:6) அக்கிரமம் செய்யும் மனிதன் (42:42) கர்வ முள்ள மனிதன் (90:4-10, 96:6) உலக இன்பங் களில் மூழ்கும் மனிதன் (76:27, 87:16) அவசரக் கார மனிதன் (17:11, 21:37, 70:19) அறியாமை நிறைந்த மனிதன் (33:72) பலஹீனமான மனிதன் (4:28), நன்றி கெட்ட மனிதன் (10:12, 11:9, 17:67, 29:65, 66, 30:33,34, 31:32, 39:49, 100:6) தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ளும் மனிதன் (10:44) இவ்வுலகப் பொருட்களை அளவு மீறி நேசிக்கும் மனிதன் (89:20, 100:8) இப்படி எண்ணற்ற குறைபாடுடைய அற்ப அறிவுடைய மனிதன்(17:85) பெரும் ஆய்வு செய்து அவனது அறிவில் பட்டவையே. அவற் றில் பல குறைபாடுகள் இருப்பது இயற்கையே. கால மாறுபாட்டால், அறிவியல் கண்டுபிடிப்பு களால் உலகியல் கல்விகளில் மேலதிக விளக்கம், ஆய்வுகள் அவசியமே. இவர்களைப் போன்ற மனிதர்களே உலகியல் கல்வித் துறைகளில் நூல்கள் இயற்றி அவை பாடமாகக் கற்பிக்கப்படுகின்றன.

எனவே உலகியல் துறைக் கல்வியைக் கற்பிக்க மேலதிக விளக்கம் கொடுக்க ஆசிரியர், குரு அவசியமே. எந்தத் துறையும் இதில் விதி விலக்குப் பெற முடியாது. அதற்கு மாறாக மார்க்கத்தைக் கொடுத்து அதைத் தெள்ளத் தெளிவாக நேரடியாக விளக்கியவன் சர்வ வல்லமை மிக்க, சர்வ ஞானம் உள்ள, அண்ட சராசங்களையும் மனிதனையும் படைத்த ஏக னாகிய இறைவன். மார்க்கம் அவனுக்கு மட் டுமே சொந்தம். அதில் மனிதர்களில் யாரும் தங்கள் மூக்கை நுழைக்க முடியாது.

முக்காலமும் அறிந்த சர்வசக்தனான இறை வன் வடிவமைத்துக் கொடுத்த மார்க்கம் ஆதலால்,அதில் அற்ப அறிவையுடைய மனித னின் மேலதிக ஆய்வோ, விளக்கமோ அணு வளவு கூட இருக்கக் கூடாது. இதைத்தான் அல்லாஹ் 49:16ல் நீங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்க முற்படுகிறீர்களா? எனக் கடிந்து கேட்கிறான். அப்படிப் பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக முற்படுவதாக 42:21ல் கண்டிருக்கிறான்.

ஆம்! உண்மைதானே. அல்லாஹ்வே மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக, விளக்கமாக, சந்தேகத்திற்கிடமின்றி நேரடியாக விளக்கி இருப்பதை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க, அவை அனைத்தையும் நிராகரித்து குஃப்ரிலாகி, மார்க்கத்திற்கு மேல் விளக்கம் கொடுக்கும் பேர்வழிகள் என இந்த மவ்லவிகள் கிளம்பினால் இவர்கள் வரம்பு மீறும் தாஃகூத்கள், மனித ஷைத்தான்கள் என் பதில் சந்தேகமுண்டா? அற்ப உலக ஆதாயங் களைக் குறிக்கோளாகக் கொண்டு ஷைத்தா னின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார் கள் என்பதில் சந்தேகமுண்டா?

உலகியல் துறைகளில் ஆசிரியர்களைக் கொண்டு, குருமார்களைக் கொண்டு கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெற்று பெரும் மேதை களாக, அறிஞர்களாகத் திகழ்வது போல், அவை கொண்டு பிழைப்பு நடத்திப் பணம் ஈட்டுவது போல், மார்க்கத் துறையிலும் ஆசிரியர்களைக் கொண்டு, மத குருமார்களைக் கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மேல் விளக்கம் பெற்றே மார்க்கத்தை விளங்க முடியும். மார்க்கத் துறையிலும் ஆலிம்கள், மவ்லவிகள் என ஒரு தனிப்பிரிவு உண்டு; அவர்கள் அதைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளலாம் எனத் தப்புக் கணக்குப் போடாதீர்கள்.

உங்களின் உலகியல் துறைகளோடு, மார்க்கத்தை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மார்க்கத் துறைக்கும் உலகியல் துறைகளுக்கும் மடுவுக் கும் மலைக்குமுள்ள பெருத்த வேறுபாடு உண்டு. உலகியல் துறைகள் உங்களைப் போன்ற அற்ப அறிவுடைய மனிதர்களின் கண்டுபிடிப்பே. மார்க்கத் துறை அகிலங்களை யும், மனிதனையும் படைத்த முக்காலமும் அறிந்த சர்வ ஞானமிக்க ஏகனான இறைவனின் அருட்கொடை; அதில் அற்ப அறிவுள்ள மனிதன் தன் மூக்கை ஆலிம், அல்லாமா, மவ்லவி, மார்க்க மேதை போன்ற பெயர்களால் நுழைக்க முடியவே முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும்.

Previous post:

Next post: